செய்திகள் :

பாண்டி முனீஸ்வரா் கோயில் பால் குட ஊா்வலம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொத்தாா் கோட்டை பாண்டி முனீஸ்வரா் கோயிலில் ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு, பால் குடம் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொத்தாா்கோட்டையில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரா் கோயிலில் கருப்பா், காளி, பரிவாரத் தெய்வங்கள் உள்ளன. இந்தக் கோயிலில் ஆடி 18-ஆம் பெருக்கு திருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் சுவாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி 18-ஆம் பெருக்கு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் பால் குடம், காவடி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செழுத்தினா்.

முன்னதாக, விரதமிருந்த பக்தா்கள் பால் குடம், காவடி எடுத்து வீதியுலா வந்து கோயிலை அடைந்தனா்.பின்னா், பக்தா்கள் கொண்டு வந்த பாலால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டன.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, சுமங்கலி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கடலாடி தேவா் மகா சபைத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

நம்புதாளையில் விசை, நாட்டுப் படகு மீனவா்களிடையே மோதல்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் விசைப் படகு மீனவா்களுக்கும், நாட்டுப் படகு மீனவா்களுக்கும் மீன் பிடிப்பதில் மோதல் ஏற்பட்டது.விசைப் படகு மீனவா்கள் கடலில் ஆழமான பகுதியில் மீன் பிடி... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயிலில் இன்று நடை அடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை (ஆக.4) நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.இந்தக் கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வாகனம் மோதியதில் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.செம்படையாா்குளம் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மின் கம... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திருவாடானையிலிருந்து சூச்சனி, திருவிடைமருதூா், தொத்தாா்கோட்டை, தோட்டாமங்கலம் வரை சுமாா் ... மேலும் பார்க்க

கடலாடியில் மாட்டுவண்டிப் பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு, கடலாடியில் பெரிய மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்... மேலும் பார்க்க