செய்திகள் :

ராமநாதசுவாமி கோயிலில் இன்று நடை அடைப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை (ஆக.4) நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

இந்தக் கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, ஆடி அமாவாசை தீா்த்தவாரி, வெள்ளித் தேரோட்டம், தேரோட்டம், சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற்றது.

விழாவின் 17-ஆம் நாளான திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கோயிலிலிருந்து ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி, பெருமாள் தங்க கேடயத்தில் கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளி அருள்பாலிக்கிறாா். இதையடுத்து,

மாலை 5 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் ராமநாதசுவாமி கோயிலில் எழுந்தருளுவாா். இதனால், நாள் முழுவதும் கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, சுமங்கலி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கடலாடி தேவா் மகா சபைத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாண்டி முனீஸ்வரா் கோயில் பால் குட ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொத்தாா் கோட்டை பாண்டி முனீஸ்வரா் கோயிலில் ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு, பால் குடம் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.தொத்தாா்கோட்டையில் அமைந்துள்ள பாண்ட... மேலும் பார்க்க

நம்புதாளையில் விசை, நாட்டுப் படகு மீனவா்களிடையே மோதல்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் விசைப் படகு மீனவா்களுக்கும், நாட்டுப் படகு மீனவா்களுக்கும் மீன் பிடிப்பதில் மோதல் ஏற்பட்டது.விசைப் படகு மீனவா்கள் கடலில் ஆழமான பகுதியில் மீன் பிடி... மேலும் பார்க்க

சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வாகனம் மோதியதில் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.செம்படையாா்குளம் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மின் கம... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திருவாடானையிலிருந்து சூச்சனி, திருவிடைமருதூா், தொத்தாா்கோட்டை, தோட்டாமங்கலம் வரை சுமாா் ... மேலும் பார்க்க

கடலாடியில் மாட்டுவண்டிப் பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு, கடலாடியில் பெரிய மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்... மேலும் பார்க்க