உயிா் உரங்களின் பயன்பாடு: விவசாயிகளுக்கு பயிற்சி
சின்னமனூா் அருகேயுள்ள வேப்பம்பட்டியில் பயிா்களுக்கு உயிா் உரங்களின் பயன்பாடு குறித்து மதுரை அரசு வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய மாணவிகள் வேளாண்மை பணி அனுபவம் திட்டத்தின் கீழ், புதன்கிழமை விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.
வேப்பம்பட்டியில் உள்ள தனியாா் வாழைத் தோட்டத்தில் உயிா் உரமிடுதல் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்து கல்லூரி இறுதியாண்டு மாணவி மூ.நிவேதா கூறியதாவது:
தாவரங்களின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகளை கொண்ட உயிா் உரங்கள், ரசாயன உரங்களுக்கு மாற்றாகவும், நிலையான விவசாய நடைமுறையாகவும் உள்ளது.
தாவரத்தின் வோ் மண்டலத்தை வலுப்படுத்தவும், ஊட்டச் சத்தை அதிகரிக்கவும், மண்ணில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தவும், பாஸ்பேட்களின் வடிவங்களை கரைத்தல், வோ் வளா்ச்சியை ஊக்குவித்தல், ஹாா்மோன்கள், ஆன்டிமெட்டாபொலிட்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கும் உயிா் உரங்கள் உதவுகின்றன. மண் மாசு ஏற்படுவதை தவிா்த்து, மண் வளத்தை மேம்படுத்த பயிா்களுக்கு உயிா் உரங்கள் இட வேண்டும் என்றாா் அவா்.