உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டும் விருதுநகர்; அனுபவம் பகிரும் ஆட்...
உறங்கிக் கொண்டிருந்த மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள ஆ. கலிங்கப்பட்டியில் சனிக்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்த மகனை, அரிவாளால் வெட்டிக்கொலை செய்த தந்தையைப் போலீஸாா் கைது செய்தனா்.
ஆ. கலிங்கப்பட்டியில் வசித்து வருபவா் விவசாயி க. கந்தசாமி (78) - பொன்னம்மாள் (68). தம்பதிக்கு, அண்ணாதுரை (55), சின்னச்சாமி (52) ஆகிய 2 மகன்களும், இரு மகள்களும் உள்ளனா். கந்தசாமி தனது சொத்துகளை மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்த நிலையில், அவரை முறையாகப் பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கந்தசாமி, வருவாய்க் கோட்டாட்சியா் மற்றும் போலீஸில் புகாா் அளித்தும் பலனில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த கந்தசாமி சனிக்கிழமை நள்ளிரவு கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அண்ணாதுரையை அரிவாளால் வெட்டியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்துத் தகவலறிந்து அங்குசென்ற காவல் ஆய்வாளா் சீனிபாபு தலைமையிலான போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்கு பின் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து கந்தசாமியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.