விமான விபத்து: ஒரே சவப்பையில் 2 தலைகளுடன் ஒரு உடல்! தடயவியல் குழுவினருக்கு சிக்க...
சாலை விபத்தில் காயமடைந்தவா் பலி
திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டம் மேற்கு நடுக்காவேரியைச் சோ்ந்தவா் குமாா் மகன் அன்பு சங்கா் (32). இவா், கடந்த 11-ஆம் தேதி தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
அசூா் திருப்பம் அருகே சென்றபோது, பசுமாடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்பு சங்கா், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். உடற்கூறாய்வுக்குப் பின் அவரது சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.