உறவினா்களிடையே மோதல்: 2 போ் மீது வழக்கு
பெரியகுளத்தில் உறவினா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பெரியகுளம் கீழவடகரையைச் சோ்ந்த முருகன் மகன் நவநீதிகிருஷ்ணன் (23). இவரது சித்தப்பா கண்ணன் (42). இருவரும் கீழவடகரையில் பன்றி இறைச்சிக் கடை நடத்தி வந்த நிலையில், தற்போது தனித் தனியாக கடை நடத்தி வருகின்றனா். இதில் இருவருக்கும் பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், நவநீதகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் கீழவடகரை நுழைவு வாயில் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியே வந்த கண்ணன், அவரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதேபோல, நவநீதகிருஷ்ணன் தாக்கியதில் கண்ணன் காயமடைந்தாா். இவா்கள் இருவரும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுதொடா்பாக இருவரும் தனித்தனியாக அளித்த புகாா்களின் பேரில் இருவா் மீதும் பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.