செய்திகள் :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது: ஜோஸ் ஹேசில்வுட்

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல் தொடரைவிட சிறந்த இடம் கிடையாது என ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் ஜோஸ் ஹேசில்வுட், தோள்பட்டை காயம் காரணமாக கடந்த ஒரு மாதமாக ஆர்சிபி அணிக்காக போட்டிகளில் விளையாடவில்லை.

இதையும் படிக்க: இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்சிபியுடன் மோதுவோம்: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

காயத்திலிருந்து மீண்டு அண்மையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணைந்த ஜோஸ் ஹேசில்வுட், சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி, பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவினார்.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் 3.1 ஓவர்கள் வீசிய ஹேசில்வுட், 21 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் சிறப்பான ஃபார்மில் இருந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜோஷ் இங்லிஷின் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது

அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது என ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் தொடர்ச்சியாக பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராவதற்கு ஐபிஎல் தொடரைவிட சிறந்த இடம் வேறு இல்லை என நினைக்கிறேன். இங்கு அதிக நேரம் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடுகிறேன். போட்டியில் இருக்கும் தீவிரத்தன்மை என்னை நன்றாக தயார்படுத்திக் கொள்ள உதவுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீசுவதைக் காட்டிலும் வேறுபட்ட விதமாக குவாலிஃபையர் 1 போட்டியில் பந்துவீசியதாக நினைக்கவில்லை. அதனால், எனது பந்துவீச்சு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. காயத்திலிருந்து மீண்டு அணிக்காக மீண்டும் சிறப்பாக செயல்படுவது சிறப்பான உணர்வைக் கொடுக்கிறது என்றார்.

இதையும் படிக்க: ஐபிஎல் எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ்: மும்பையை வீழ்த்துமா? மும்பையிடம் வீழுமா?

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற ஜூன் 11 ஆம் தேதி லார்ட்ஸ் திடலில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி: இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது!

ஐபிஎல் 2025 தொடரின் இறுதி ஆட்டத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 1) அகமதாபாதில் நடைபெற்ற குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த... மேலும் பார்க்க

மழையால் தாமதமாகும் குவாலிஃபையர் 2; மும்பை இந்தியன்ஸுக்கு ஆபத்தா?

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 போட்டி மழையால் தாமதம் ஆகியுள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (ஜூன் 1) நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ம... மேலும் பார்க்க

குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (ஜூன் 1) நடைபெறும் குவாலிஃபையர் 2 ... மேலும் பார்க்க

மும்பைக்கு எதிரான போட்டியில் சஹால் வருகை?

குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப் அணியில் சஹால் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் (219) எடுத்துள்ள யுஸ்வேந்திர சஹால் (34 வயது) பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார... மேலும் பார்க்க

கோப்பை கனவு: கால்பந்து உலகில் நடக்கும் அதிசயம் ஆர்சிபிக்கும் நடக்குமா?

கோப்பையே வெல்லாத கால்பந்து அணிகள் எல்லாம் இந்த சீசனில் வெல்லும்போது ஆர்சியாலும் வெல்ல முடியுமென அதன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சீசனில் கால்பந்து உலகில் பல அணிகள்... மேலும் பார்க்க

ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?

ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தால் மகிழ்ச்சியில... மேலும் பார்க்க