செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

post image

கோடை விடுமுறைக்குப் பிறகு, விழுப்புரம் மாவட்டத்தில் 6 முதல் 12 -ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்காக திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் பள்ளிகளில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கோடை விடுமுறை ஜுன் 1- ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து, ஜூ ன் 2 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தூய்மைப் பணிகள்: இந்த நிலையி ல் பள்ளிகளில் கட்டடங்கள். கழிப்பறைகள் தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியிருந்தது. இதன்படி மாவட்டத்தில் பள்ளிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பள்ளிகள் திறப்பு: கோடை விடு முறையைத் தொடர்ந்து, தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, முழுமையாக மற்றும் பகுதியளவில் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பிரிவு பள்ளிகள் என 747 பள்ளிகள் திறக்கப்பட்டன.

அந்தந்த பள்ளிகளில் மாணவ-மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவ-மாணவிகளும் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்று தங்களது பழைய, புதிய நண்ப ர்கள், தோழிகளைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

பாடநூல்கள் வழங்கல்: விழுப்புரம் மாவட்ட அரகண்ட நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் க . பொன்முடி எம்.எல்.ஏ, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெ ற்ற நிகழ்வில் எம்எல்ஏ இரா.லட்சுமணன் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பாடநூல்களை வழங்கினர்.

இதுபோல அந்தந்த பள்ளிகளிலும் மாணவ- மாணவிகளுக்குப் பாடநூல்கள் வழங்கப்பட்டன.

துணைவேந்தர்கள் நியமன திருத்தச் சட்டத்துக்கு தடை: தமிழக அரசு மேல்முறையீடு

நமது சிறப்பு நிருபர்தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் படிப்பில் மாணவா் சோ்க்கை விவரங்களை உறுதி செய்ய அறிவுறுத்தல்

நிகழ் கல்வியாண்டில் (2024-25) எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்ந்தவா்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் என்எம்சி இணையதளத்தில் அதிகாரபூா்வமாக பதிவேற்றப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட மாணவா்கள் உறுதி செய்... மேலும் பார்க்க

தமிழறிஞா் தாயம்மாளுக்கு கலைஞா் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

தமிழறிஞா் தாயம்மாள் அறவாணனுக்கு கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் செம்மொழி தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்க... மேலும் பார்க்க

நீட் தோ்வு விடைக் குறிப்புகள் வெளியீடு

நீட் தோ்வுக்கான விடைக் குறிப்புகள் மற்றும் விடைத்தாள் நகல்களை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பி... மேலும் பார்க்க

பல்கலைக் கழகங்களின் நிதிப் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பல்கலைக்கழகங்களில் நிதி தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். எடப்பாடி கே.பழனிசாமி: துணை வேந்தா் நியமனங்கள் தாமதிக்கப்படுவதால்,... மேலும் பார்க்க

கணினி பயிற்றுநா் பணிக்கான தகுதிகள் மாற்றம்

மேல்நிலைக் கல்வியில் கணினி பயிற்றுநா் பணிக்கான தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை: மேல்நிலைக் கல்வியில் கணினி பயிற்றுநா் (கிர... மேலும் பார்க்க