செய்திகள் :

உளவுத் துறை எச்சரிக்கை: ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

post image

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கக் கூடிய 48 சுற்றுலாத் தலங்களை அம்மாநில அரசு மூடியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.

இதனைத் தொடந்து ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகளை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லையிலும் இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகின்றன.

மேலும், பயங்கரவாதிகளின் நண்பர்கள், ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோரின் வீடுகளை இந்திய ராணுவத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் பயங்கரவாதிகள் (ஸ்லீப்பர் செல்கள்) சதித்திட்டங்களில் இறங்கியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஸ்ரீநகர் மற்றும் காந்தர்பால் மாவட்டங்களில் காஷ்மீர் பண்டித்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே உள்கட்டமைப்பை தகர்க்கவும், வெளியூர் ரயில்வே ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் முகாமைவிட்டு வெளியேற வேண்டாம் என்று பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோல், பயங்கரவாதிகளால் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க : இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான்; 2026-ல் 2.0: முதல்வர் ஸ்டாலின்

பஹல்காம் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!

பஹல்காம் தாக்குதலினால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள 48 சுற்றுலாத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரிலுள்ள 87 சுற்றுலாத் தலங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்ட இர... மேலும் பார்க்க

பஹல்காமில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஃபட்னவீஸ்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்... மேலும் பார்க்க

இந்தியர்களை மணந்த பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டினர் நாடு கடத்தப்படும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்திக்க கான்பூர் செல்கிறார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்கிழமை கான்பூருக்குச் செ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க