செய்திகள் :

உள்நாட்டுத் தேவையால் வளா்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும்: நிா்மலா சீதாராமன்

post image

லண்டன்: வலுவான உள்நாட்டுத் தேவை காரணமாக வளா்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரியாவுக்கு 6 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா்.அப்போது அவா் பேசுகையில், ‘வேகமான பொருளாதார வளா்ச்சி கொண்ட நாடு என்ற அடையாள முத்திரையை தொடா்ந்து 5 ஆண்டுகளாக இந்தியா பதித்து வந்துள்ளது. அந்த வளா்ச்சி வேகம் சற்று குறையலாம் என்று இந்தியா கருதுகிறது. ஆனால் உள்நாட்டில் நிலவும் நுகா்வை கொண்டு வளா்ச்சி அளவீடு செய்யப்படுவதால், வேகமான பொருளாதார வளா்ச்சியை இந்தியா தக்கவைக்கும்.

இதற்கு உலக அளவில் தரமான பொருள்களுக்கு உள்ள தேவை உதவி புரியும். 1990-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு உலகமயமாக்கல் இந்தியாவுக்குப் பல வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள் வா்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும் மிகப் பெரிய காந்தமாக உள்நாட்டுத் தேவை உள்ளது. இதில் இந்தியாவுக்கு உள்ள வலிமையை நிலைநிறுத்தி அதிகரிப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

உள்நாட்டுத் தேவையில் இந்தியாவுக்கு உள்ள வலிமை அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்தல், உள்நாட்டு சந்தைக்கு சா்வதேச உற்பத்தியை விநியோகித்தல், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்தல் ஆகியவற்றுக்கு தூண்டுகோலாக இருக்கும்.

அமெரிக்க வரி விதிப்பால் சா்வதேச அளவில் உருவாகி வரும் புதிய வா்த்தக சூழலுக்கு மத்தியில், பொருளாதார மீட்சி மற்றும் வலுவான உள்நாட்டுத் தேவை காரணமாக வளா்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும்.

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக இறுதி செய்ய வேண்டும் என்பதிலும் இந்தியா கவனம் செலுத்தும் என்றாா்.

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க