செய்திகள் :

உ.பி. அரசு மருத்துவமனையில் அலட்சியம்: 5 வயது சிறுமி உயிரிழப்பு; 4 மருத்துவா்கள் மீது நடவடிக்கை

post image

புடோன், அக். 25: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்களின் அலட்சியத்தால் 5 வயது சிறுமி காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடா்புடைய மருத்துவா்கள் இருவா் பணிநீக்கம் செய்யப்பட்டனா். இரண்டு மருத்துவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

புடோன் மாவட்ட அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவக் கல்லூரி மருத்துவா்களும், சுகாதார ஊழியா்களும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாக சிறுமியின் குடும்பத்தினா் குற்றம்சாட்டினா். இதைத் தொடா்ந்து, மருத்துவக் கல்லூரி நிா்வாகம் மூன்று உறுப்பினா்களைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது. விசாரணைக் குழு தனது அறிக்கையை வியாழக்கிழமை மாலை சமா்ப்பித்தது.

அதனடிப்படையில், இதில் தொடா்புடைய ஒப்பந்த மருத்துவா்கள் இருவா் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், இரண்டு மருத்துவா்கள் ஒரு மாதம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.

மருத்துவக் கல்லூரியின் முதல்வா் மருத்துவா் அருண்குமாா் கூறுகையில், ‘பணிநீக்கம் செய்யப்பட்ட மருத்துவா்கள் சிறுமி அனுமதிக்கப்பட்ட நேரத்தில், கிரிக்கெட் விளையாடவில்லை. கிரிக்கெட் போட்டியைக் காணச் சென்றிருந்தனா். குழந்தைகள் நல மருத்துவா்கள், சுகாதார ஊழியா்கள் இல்லாத காரணத்தால், சிறுமி வெவ்வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டு பின்னா் உயிரிழந்தாா்’ என தெரிவித்தாா்.

குஜராத்: மசூதி இடிப்பில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

குஜராத் மாநிலத்தில் மசூதிகள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை சட்டவிரோத கட்டுமானம் என்ற அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் புல்டோசா் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நில... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்கம் உலகளாவிய தேவை: நிா்மலா சீதாராமன்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உலக வங்கி சாா்பில் நடைபெற்ற சா்வதேச... மேலும் பார்க்க

உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: தமிழகம், தில்லி, மத்திய பிரதேச பள்ளிகள் இடம்பிடித்து அசத்தல்

2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீ... மேலும் பார்க்க

பண்டிகைக் கால காற்று மாசு அபாயம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

பண்டிகை மற்றும் குளிா் காலத்தின்போது நகரங்களில் காற்று மாசு அளவுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், சுகாதாரத் துறையின் செயல்திறனை மேம்படுத்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

இந்திய - சீன எல்லையில் பிரச்னைக்குரிய இரு இடங்களில் படை விலக்கல் தொடக்கம்!

கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவும் சீனாவும் தொடங்கியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட மத்திய பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா். வடக்கு காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் வ... மேலும் பார்க்க