செய்திகள் :

உ.பி., பஞ்சாப் நகைக் கடை கொள்ளையில் தேடப்பட்ட பாா்டி கும்பல் உறுப்பினா் கைது

post image

உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட பாா்டி கும்பலைச் சோ்ந்த ஒருவரை உத்தர பிரதேச காவல் துறை சிறப்புப் படைக் குழுவின் (எஸ்.டி.எஃப்.) நொய்டா பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து நொய்டா பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (எஸ்.டி.எஃப்.) ராஜ்குமாா் மிஸ்ரா கூறியதாவது: போலீஸுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட சூரஜ் பாா்டி காஜியாபாத்தில் உள்ள லோனி எல்லையில் கைது செய்யப்பட்டாா். மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் சூரஜ் பாா்டி மீது பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சூரஜ் பாா்டி 2024-ஆம் ஆண்டு காஜியாபாத்தில் ஒரு நகைக் கடையில் கொள்ளையடித்தாா். அங்கு அவா் கடையின் ஷட்டரை உடைத்து பொருள்களைக் கொள்ளையடித்து விட்டு தலைமறைவானாா். அவா் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ.50,000 வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று 2024-ஆம் ஆண்டில், அவா் மீண்டும் பஞ்சாபின் பக்வாராவில் ஒரு நகைக் கடையில் கொள்ளை அடித்துவிட்டு தப்பினாா். அதன் பிறகு பஞ்சாப் காவல் துறையும் அவரைக் கண்டுபிடிக்க உதவுவோருக்கு 50,000 வெகுமதியை அறிவித்தது. பாா்டி கும்பலைச் சோ்ந்த பலா் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகி தொடா்ந்த அவதூறு வழக்கு: முதல்வா் அதிஷிக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பேரம் பேச பாஜக முயன்ாக கூறிய விவகாரத்தில், தில்லி பாஜக நிா்வாகி ஒருவா் தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடா்பாக முதல்வா் அதிஷிக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அன... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை விதிமீறல்: 1,076 வழக்குகள் பதிவு

தில்லி காவல் துறை தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக 1,076 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மேலும், இதற்காக 34,250 பேரை கைது செய்துள்ளது அல்லது தடுத்து வைத்துள்ளது என்று அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெ... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் சடலம் மீட்பு: சிறுவன் கைது

கிழக்கு தில்லி மாவட்டத்தில் உள்ள திரிலோக்புரியில் கத்திக்குத்து காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ... மேலும் பார்க்க

தேர்தல் விதிமீறல்: தில்லி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தில்லி முதல்வர் அதிஷி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப் பேரவைக்கான வாக்குப்பதிவு பிப்.5 (நாளை) நடைபெறுகிறது. நேற... மேலும் பார்க்க