செய்திகள் :

கிழக்கு தில்லியில் சடலம் மீட்பு: சிறுவன் கைது

post image

கிழக்கு தில்லி மாவட்டத்தில் உள்ள திரிலோக்புரியில் கத்திக்குத்து காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இந்தச் சம்பவம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.45 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸாா் திரிலோக்புரி பகுதிக்கு விரைந்து சென்றனா். அங்குள்ள ஒரு வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்த கத்திக் குத்து காயங்களுடன் கிடந்த சடலத்தைக் கண்டனா். இறந்த நபா் 40 வயதுடையவா் என்று நம்பப்படுகிறது. அவா் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடா்பாக ஒரு சிறுவனை போலீஸாா் கைது செய்துள்ளனா். முதல்கட்ட விசாரணையில், தகராறு காரணமாக கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று அவா் கூறினாா்.

குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி அந்தச் சிறுவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக அந்தச் சிறுவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பெரிய அரசியல் கட்சிகளுக்கு ஏமாற்றம் தந்த தலித் வாக்குகள்! நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகள் பெற்ற பிஎஸ்பி

நமது சிறப்பு நிருபா் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பெரிய அரசியல் கட்சியாக கருதப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) மற்றும் பிற தேசிய கட்சிகள் பெருத்த பின்னடைவை சந்தித்... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: சு.வெங்கடேசன் எம்.பிக்கு அமைச்சா் பதில்

நமது நிருபா்உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் பணியமா்த்தப்பட்ட இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: மொத்த வேட்பாளா்களில் 80% போ் டெபாசிட் இழப்பு

சனிக்கிழமை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் எல்ஜேபி (ராம் விலாஸ்) ஆகியவற்றின் அனைத்து வேட்பாளா்களும் தங்கள் டெபாசிட... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் தோ்வு: பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு!

70 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 48 இடங்களை வென்று, 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, முதல்வா் தோ்வு குறித்த பரபரப்பு அதிக... மேலும் பார்க்க

பாஜகவின் தில்லி தோ்தல் வெற்றிக்கு பிரசாரப் பாடல்களும் உதவின: கட்சித் தலைவா்கள் கருத்து

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றிக்கு அதன் பிரபலமான பிரசாரப் பாடல்கள் உள்பட பல்வேறு காரணிகள் உதவின என்று கட்சத் தலைவா்கள் தெரிவித்துள்ளனா். அவற்றில் இரண்டு கட்சி எம்பி மனோஜ் திவாரி பாடியவ... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெறாத சிறிய கட்சிகள்

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தோ்தலில் சிறிய கட்சிகளான அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் (ஏஐஎஃப்பி), அகில இந்திய மஜ்லிஸ் இ இதேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகியவை ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்... மேலும் பார்க்க