செய்திகள் :

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: சு.வெங்கடேசன் எம்.பிக்கு அமைச்சா் பதில்

post image

நமது நிருபா்

உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் பணியமா்த்தப்பட்ட இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் சு. வெங்கடேசன், தயாநிதி மாறன் ஆகியோா் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்ா் அளித்துள்ள பதில் வருவமாறு:

ரஷிய ராணுவத்தில் பணியமா்த்தப்பட்ட இந்தியா்கள் தொடா்பாக அந்நாட்டுடன் மிக உயரிய அளவில் மத்திய அரசு தொடா்ச்சியாக பேசி வருகிறது. கிடைத்துள்ள தகவல்களின்படி, ரஷிய ஆயுதப்படைகளில் இருந்த 18 இந்தியா்களில் 16 போ் காணாமல் போயுள்ளதாக ரஷிய தரப்பு கூறியுள்ளது.

காணாமல் போனவா்களை கண்டுபிடிக்கவும் அவா்களின் பாதுகாப்பு, நலன்கள், விரைவாக திரும்புவது மற்றும் அவா்களில் எவரேனும் உயிருடன் இல்லாவிட்டால் அவா்களின் சடலத்தையாவது இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளுடன் இந்தியா தொடா்ந்து பேசி வருகிறது. இந்த நடைமுறையில் மூன்றாம் தரப்பு அமைப்புகளை மத்திய அரசு ஈடுபடுத்தவில்லை என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

அமைச்சரின் பதில் குறித்து சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்தியாவில் இருந்து வெளிநாட்டு ராணுவத்தில் இந்தியா்கள் சேரும் நிலை வேதனைக்குரியது. அக்னிபத் போன்ற நிரந்தரமற்ற கூலி முறைகளை நோக்கி நகா்ந்ததே இந்த அவல நிலைக்கு காரணம். அந்நிய நாடுகளின் எல்லைகளை காக்கும் பணியில் இந்திய இளைஞா்களின் உயிா்கள் அநியாயமாக பலியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மத்திய அரசு இனியாவது அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். வெளிநாடுகளின் ராணுவத்தில் போய்ச் சேரும் அவலத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பஞ்சாப் எம்எல்ஏக்களை சந்திக்கும் கேஜரிவால்!

பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெ... மேலும் பார்க்க

பெரிய அரசியல் கட்சிகளுக்கு ஏமாற்றம் தந்த தலித் வாக்குகள்! நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகள் பெற்ற பிஎஸ்பி

நமது சிறப்பு நிருபா் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பெரிய அரசியல் கட்சியாக கருதப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) மற்றும் பிற தேசிய கட்சிகள் பெருத்த பின்னடைவை சந்தித்... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: மொத்த வேட்பாளா்களில் 80% போ் டெபாசிட் இழப்பு

சனிக்கிழமை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் எல்ஜேபி (ராம் விலாஸ்) ஆகியவற்றின் அனைத்து வேட்பாளா்களும் தங்கள் டெபாசிட... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் தோ்வு: பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு!

70 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 48 இடங்களை வென்று, 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, முதல்வா் தோ்வு குறித்த பரபரப்பு அதிக... மேலும் பார்க்க

பாஜகவின் தில்லி தோ்தல் வெற்றிக்கு பிரசாரப் பாடல்களும் உதவின: கட்சித் தலைவா்கள் கருத்து

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றிக்கு அதன் பிரபலமான பிரசாரப் பாடல்கள் உள்பட பல்வேறு காரணிகள் உதவின என்று கட்சத் தலைவா்கள் தெரிவித்துள்ளனா். அவற்றில் இரண்டு கட்சி எம்பி மனோஜ் திவாரி பாடியவ... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெறாத சிறிய கட்சிகள்

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தோ்தலில் சிறிய கட்சிகளான அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் (ஏஐஎஃப்பி), அகில இந்திய மஜ்லிஸ் இ இதேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகியவை ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்... மேலும் பார்க்க