செய்திகள் :

பஞ்சாப் எம்எல்ஏக்களை சந்திக்கும் கேஜரிவால்!

post image

பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி வெறும் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான 5,000 வழக்குகள்: விரைந்து முடிக்க உச்சநீதிமன்றத்தில் மனு

இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை நடத்தவுள்ளதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெறும் இந்த ஆலோசனையில், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

போலீஸாா் மீது தாக்குதல்: எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது வழக்குப் பதிவு

நமது நிருபா்புது தில்லி: ஜாமியா நகரில் திங்கள்கிழமை ஒரு போலீஸ் குழு மீது தாக்குதல் நடத்தியதாக ஓக்லா ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனாத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

ஊனமுற்றோா் ஓய்வூதியத்தை ரூ.5,000-ஆக உயா்த்தக் கோரி மத்திய அமைச்சரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோா் ஓய்வூதியத்தை ரூ.5000-ஆக உயா்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய அமைப்பு (என்பிஆா்டி) தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

‘பிஎம்-ஸ்ரீ’ திட்டம்: தமிழக முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு கல்வித் துறை மறுப்பு

புது தில்லி: ‘பிஎம் - ஸ்ரீ’ பள்ளிகள் திட்டத்தில் சேரும்படி தமிழகத்துக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டதாக மத்திய கல்வித் துறை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வா்... மேலும் பார்க்க

நான்காவது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவு!

நமது நிருபா்மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், ... மேலும் பார்க்க

2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா: மத்திய அமைச்சா் நட்டா உறுதி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வருகின்ற 2027-ஆம் ஆண்டிற்குள் லிப்ம்பாட்டிக் பைலேரியாசிசு(எல்.எஃப்) என்கிற யானைக்கால் நோய் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டு இருப்பதாக மத்திய சுக... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு விதிகள் நிலவரம்: தமிழக எம்பிக்களின் கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நவோதயா வித்யாலயா திட்டம், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரைவு விதிகள் தொடா்பாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சா்கள் பதிலளித்துள... மேலும் பார்க்க