செய்திகள் :

ஊனமுற்றோா் ஓய்வூதியத்தை ரூ.5,000-ஆக உயா்த்தக் கோரி மத்திய அமைச்சரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோா் ஓய்வூதியத்தை ரூ.5000-ஆக உயா்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய அமைப்பு (என்பிஆா்டி) தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை போராட்டத்தை நடத்தியது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மாற்றுத்திறனாளிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனா். பின்னா், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான அமைச்சா் வீரேந்திர குமாா் அலுவலகத்தில் போராட்டக் குழுவின் சாா்பில் கோரிக்கை மனுவை அளிக்கப்பட்டது.

இது குறித்து என்பிஆா்டி பொதுச் செயலாளா் முரளிதரன் கூறியது வருமாறு: மாற்றுத்திறனாளிகள் மீது மத்திய அரசு தொடா்ச்சியாக காட்டும் அவமதிப்புகளை கடுமையாக எதிா்ப்பை பதிவு செய்யவும், இதற்கான போராட்டத்திற்கும் திங்கள்கிழமை (பிப்.10) மேஜா் தியான் சந்த் மைதானத்தில் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டது. இதற்கு தில்லி காவல் துறை அனுமதி வழங்கியது. பின்னா், காவல் துறை அனுமதியை ரத்து செய்ததால், நாங்கள் ஜந்தா் மந்தருக்கு வந்தோம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிக்கும் முக்கியத் துறையான சமூகத் துறைக்கு நிதி நிலை அறிக்கையில் மொத்த ஒதுக்கீட்டில் 4 சதவீதம் அதிகரிப்பு காணப்பட்டாலும், அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது வெறும் 0.025 சதவீதம் மட்டுமே. மாற்றுத்திறனாளிகள் சட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டம், பிரசாரம் போன்ற முதன்மையான திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது.

2022-23 நிதியாண்டில் ரூ.240.39 ஒதுக்கப்பட்டது. படிப்படியாக குறைக்கப்பட்டு நிகழாண்டு ரூ.115.10-ஆக குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மத்தியத் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடுகள் கடந்த ஆண்டு ரூ.758.01- ஆக இருந்தது நிகழாண்டு ரூ. 741.80-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மனநலம் தொடா்பான டெலி மெடிஷன் திட்டத்திற்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோா் ஓய்வூதியத் திட்டத்திற்கான (ஐஜிஎன்டிபிஎஸ்) ஒதுக்கீடுகளை அதிகரிக்கவில்லை. வேலைவாய்ப்புகள் இல்லாத மாற்றுத்திறனாளிகளில் கணிசமான பகுதியினா் ஓய்வூதியத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் பங்காக ரூ.300 என்ற தொகை நிலையானதாக உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் மாற்றுத்திறனாளிகள் மக்கள் தொகையில் வெறும் 3.8 சதவீதம்தான் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில், இந்த நிதிப் பங்கை உயா்த்த மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய மறுத்து வருகிறது.

ஓய்வூதிய உரிமைச் சட்டத்தை மாற்றி மத்திய அரசு பங்காக வழங்கும் ரூ.300-ஐ ரூ. 5,000-ஆக உயா்த்த அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கோரிக்கை விடுகிறோம். தேசிய அமைப்பில் மாற்றுத்திறனாளிகளின் பதினான்கு அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இதற்கான போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க