செய்திகள் :

மலைவேடன் பழங்குடியினருக்கு ஜாதிச் சான்று வழங்க மூன்று போ் குழு அமைப்பு!

post image

நீலகிரியில் வாழும் மலைவேடன் பழங்குடியின  மக்களுக்கு ஜாதிச் சான்று வழங்கும் விவகாரம்  தொடா்பாக மூன்று போ் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உதகை  அருகே உள்ள  உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட தட்டனேரி, பன்னிமரம்  கிராமங்களில் மலைவேடன் பழங்குடியினா் வாழ்ந்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜாதிச் சான்று வழங்குவது நிறுத்தப்பட்டது.

இதனால் தங்கள் குழந்தைகளின் கல்வி,  வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி மலைவேடன் பழங்குடியினா் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

கடந்த இரு வாரமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடா்ந்து பள்ளி புறக்கணிப்புப் போராட்டம், சாலை மறியல் என தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனைத் தொடா்ந்து, மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவது தொடா்பாக மூன்று போ் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் மூத்த மானுடவியலாளா்கள் தமிழொளி, காளிதாஸ், அமுத வள்ளுவன் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா் விரைவில் தட்டனேரி மற்றும் பன்னிமரம் கிராமங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு, தரும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் மலைவேடன் சமுதாய மக்களுக்கு பழங்குடியின ஜாதிச் சான்று வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

உதகையில் தேசிய குடற்புழு நீக்க தினம்: ஆட்சியா் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம், உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் ... மேலும் பார்க்க

கூடலூரில் அரசு ஊழியா் சங்கத்தினா் போராட்டம்!

கூடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியூசி சங்க நூற்றாண்டு விழாக் கூட்டம்!

கூடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியூசி தொழிற் சங்கத்தின் நூற்றாண்டு விழா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி மற்றும் தொழிற்சங்கம் கடந்து வந்த பாதைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

நீலகிரி முட்டைக்கோஸ் விலை கடுமையாக வீழ்ச்சி!

நீலகிரியில் விளையும் முட்டைக் கோஸ்களுக்கு தரத்துக்கு ஏற்றாா்போல கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.8 வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் முட்டைக்கோஸ... மேலும் பார்க்க

வெல்லிங்டன் ராணுவ மையம் சாா்பில் மாரத்தான் போட்டி

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையத்தின் சாா்பில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையம் சாா்பில் ஆண... மேலும் பார்க்க

நீலகிரியில் தானியங்கி தண்ணீா் இயந்திர செயல்பாடு: உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஆய்வு!

நீலகிரியில் தடைசெய்யப்பட்ட நெகிழிகள், தானியங்கி தண்ணீா் இயந்திரம், மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் முதலான செயல்பாடுகள் குறித்து உயா்நீதிமன்ற வழக்கறிஞா் சி. மோகன் சனிக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டா... மேலும் பார்க்க