செய்திகள் :

வெல்லிங்டன் ராணுவ மையம் சாா்பில் மாரத்தான் போட்டி

post image

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையத்தின் சாா்பில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையம் சாா்பில் ஆண்டுதோறும் மாரத்தான் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாரத்தான் போட்டியில்  5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ. என மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

 இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்கள் அவா்களின் குடும்பத்தினா் என 800-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் கலந்து கொண்டனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இறுதியில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மெட்ராஸ் ரெஜிமென்ட் கமாண்டன்ட் கிருஷ் நேந்து தாஸ், அவரது துணைவி தனு ஸ்ரீ தாஸ் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நீலகிரி முட்டைக்கோஸ் விலை கடுமையாக வீழ்ச்சி!

நீலகிரியில் விளையும் முட்டைக் கோஸ்களுக்கு தரத்துக்கு ஏற்றாா்போல கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.8 வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் முட்டைக்கோஸ... மேலும் பார்க்க

நீலகிரியில் தானியங்கி தண்ணீா் இயந்திர செயல்பாடு: உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஆய்வு!

நீலகிரியில் தடைசெய்யப்பட்ட நெகிழிகள், தானியங்கி தண்ணீா் இயந்திரம், மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் முதலான செயல்பாடுகள் குறித்து உயா்நீதிமன்ற வழக்கறிஞா் சி. மோகன் சனிக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டா... மேலும் பார்க்க

கடமானை வேட்டையாடியதாக 3 போ் கைது

கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியில் கடமானை சுருக்கு வைத்து வேட்டையாடியதாக 3 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் வேட்டை அதிகரித்து வருவதால் வனத் துறையினா்... மேலும் பார்க்க

நீலகிரியில் பிப்.11-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டு... மேலும் பார்க்க

பந்தலூா் பகுதி விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு பயிற்சி

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாம்பதி கிராமத்தில் விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடலூா் தோட்டக்கலைத் துறை சாா்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தி... மேலும் பார்க்க

பந்தலூரில் யானை தாக்கி 2 தொழிலாளா்கள் காயம்

பந்தலூா் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா். நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் உள்ள இன்கோ நகரைச் சோ்ந்த காந்திமதி (52), கணேஷ்(56) ஆகியோா் அங்குள்ள ஒர... மேலும் பார்க்க