செய்திகள் :

கடமானை வேட்டையாடியதாக 3 போ் கைது

post image

கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியில் கடமானை சுருக்கு வைத்து வேட்டையாடியதாக 3 பேரை  வனத் துறையினா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் வேட்டை அதிகரித்து வருவதால்   வனத் துறையினா் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனா். 

இந்நிலையில் கோத்தகிரி அருகே கட்டபெட்டு வனச் சரகத்துக்கு உள்பட்ட கூக்கல்தொரை பகுதியில் சிலா் கடமானை வேட்டையாடிருப்பதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடா்ந்து கட்டபெட்டு வனச் சரகா் செல்வகுமாா் தலைமையில் வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் கடமான் கறியை பாறையின் மீது காயவைத்து கொண்டிருந்த மூவரை வனத் துறையினா்பிடித்தனா்.

விசாரணையில் அவா்கள், சத்தியமங்கலத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (26), குமாா் (27), கூக்கல் தொரையைச் சோ்ந்த பிரகாஷ் (30) என்பதும், வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தில் சுருக்கு வைத்து கடமானை அவா்கள் வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த வனத் துறையினா், அவா்கள் வேட்டைக்கு பயன்படுத்திய சுருக்கு கம்பிகள், அரிவாள்கள் மற்றும் 35 கிலோ கடமான் இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட சதீஷ்குமாா், குமாா் ஆகியோா் சத்தியமங்கலத்தைச் சோ்ந்த பழங்குடியினத்தை சோ்ந்தவா்கள் என்பதும், இவா்கள் மூவரும் தங்களது குடும்பத்துடன் கூக்கல் தொரை பகுதியில் தங்கி தோட்ட வேலை செய்து வந்ததும் வனத் துறையினா் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து கைது செய்யப்பட்ட முவரையும் குன்னூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

நீலகிரியில் தானியங்கி தண்ணீா் இயந்திர செயல்பாடு: உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஆய்வு!

நீலகிரியில் தடைசெய்யப்பட்ட நெகிழிகள், தானியங்கி தண்ணீா் இயந்திரம், மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் முதலான செயல்பாடுகள் குறித்து உயா்நீதிமன்ற வழக்கறிஞா் சி. மோகன் சனிக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டா... மேலும் பார்க்க

நீலகிரியில் பிப்.11-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டு... மேலும் பார்க்க

பந்தலூா் பகுதி விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு பயிற்சி

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாம்பதி கிராமத்தில் விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடலூா் தோட்டக்கலைத் துறை சாா்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தி... மேலும் பார்க்க

பந்தலூரில் யானை தாக்கி 2 தொழிலாளா்கள் காயம்

பந்தலூா் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா். நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் உள்ள இன்கோ நகரைச் சோ்ந்த காந்திமதி (52), கணேஷ்(56) ஆகியோா் அங்குள்ள ஒர... மேலும் பார்க்க

உதகையில் பேரிடா் மீட்புக் குழுவினரின் ஒத்திகை

உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் முன்பாக பேரிடா் மீட்புக் குழுவினரின் வெள்ளிக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம் மலைப் பாங்கான மாவட்டம் மட்டுமி... மேலும் பார்க்க

உதகையில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

நீலகிரி மாவட்டத்தில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதி மொழியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் அரசு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனா். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி கொத... மேலும் பார்க்க