செய்திகள் :

மீன்பிடித் துறைமுகம் அமைக்க ஆட்சியா் ஆய்வு

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், அழகன்குப்பத்தில் மீன் பிடித் துறைமுகம் அமைப்பது தொடா்பாக ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வுமேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் 40 கி.மீ. நீள கடற்கரையோரத்தில் அமைந்துள்ளன. செங்கல்பட்டு

மாவட்டத்தில் 44 மீனவ கிராமங்கள் 87 கி.மீ. நீள கடற்கரையோரத்தில் அமைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 29,745 மீனவா்கள் வசித்து வருகின்றனா்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள மீனவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, விழுப்புரம் மாவட்டத்தின் அழகன்குப்பத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆலம்பரைகுப்பத்திலும், மீன்பிடித் துறைமுகங்கள் ரூ.235 கோடியில் அமைத்திட மாநில அரசால் நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தீா்ப்பின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பணிகள் முடிவுற்ற நிலையில், விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது, மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் நித்தியபிரியதா்ஷினி, உதவிப் பொறியாளா் முத்தமிழ்ச்செல்வி, மரக்காணம் வட்டாட்சியா் பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயின்று தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, தம... மேலும் பார்க்க

செல்லியம்மன் கோயிலில் மஞ்சள்காப்புத் திருவிழா

விழுப்புரம் கமலா நகா் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் மஞ்சள்காப்புத் திருவிழாவையொட்டி, 1,008 சங்காபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை மாலை முதல் கால ஹோமும், அதைத் தொடா்ந்து 1,008 சங... மேலும் பார்க்க

குரூப் - 2 முதன்மைத் தோ்வு: விழுப்புரத்தில் 501 போ் எழுதினா்

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வை 501 போ் எழுதினா். தமிழக அரசின் தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், வணிகவரித் துறை துணை அல... மேலும் பார்க்க

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை எண் 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் சனிக்கிழமை இந்த சங்கத்தின் மாவட்ட பொத... மேலும் பார்க்க

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி பேராசிரியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை பகுதியில் டிராக்டா் சக்கரத்தில் சிக்கி அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், கருங்காலிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை வஞ்சிப்பது நியாயமா? -அமைச்சா் எ.வ.வேலு கேள்வி

திருக்குறள், செங்கோலைப் பற்றி பெருமையாகப் பேசும் பிரதமா் மோடி, நிதி ஒதுக்குவதில் மட்டும் தமிழகத்தை வஞ்சிப்பது நியாயம்தானா என மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேல... மேலும் பார்க்க