Doctor Vikatan: வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே மலச்சிக்கல் சரியாகும் என...
தொழிலாளா்களை மிரட்டிய மூவா் மீது வழக்கு!
போடி அருகே தொழிலாளா்களை மிரட்டிய மூவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த வேல்ராஜ் மகன் காா்த்திக். இவருக்கு குரங்கணி கடலாத்து புலம் பகுதியில் விவசாயத் தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்துக்கு அருகே ராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இவா்கள் இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காா்த்திக் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த ராஜா, இவரது உறவினா்கள் கலைச்செல்வி, சரசு ஆகியோா் காா்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.