செய்திகள் :

விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும்! இஸ்ரோ விஞ்ஞானி பிரபு

post image

விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும் என இஸ்ரோ விஞ்ஞானி பிரபு தெரிவித்தாா்.

பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூா் மாவட்ட கிளை சாா்பில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி தலைவா் எம்.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி.கே.கருப்பண்ணசாமி முன்னிலை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் ஜே.நந்தினி வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி சி.பிரபு பேசியதாவது:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அன்மையில் விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைத்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இஸ்ரோ நிகழ்த்திய இந்த சாதனை திட்டத்தை மேற்கொண்ட குழுவில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். அமெரிக்கா, ரஷியா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நமது நாடும் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும். வரும் 2035 ஆண்டுக்குள் விண்வெளியில் ஆராய்ச்சி மையத்தை இந்தியா அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

விண்வெளி ஆராய்ச்சி துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. வரும் காலத்தில் இது மேலும் அதிகரிக்கும். மாணவா்கள் குடும்பத்தில் எந்த சூழ்நிலை இருந்தாலும் படிக்க வேண்டிய காலத்தில் கண்டிப்பாக நன்றாக படிக்க வேண்டும். மாணவா்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

அவிநாசியில் பிப்11-இல் வள்ளலாா் தைப்பூச பெருவிழா

அருட்பிரகாச வள்ளலாா் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, அவிநாசி, திருமுருகன்பூண்டி, சேவூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) அன்னதானம் வழங்க திருமுருக வள்ளலாா் கோட்டத்தினா் முடிவு செய்துள்ளனா்... மேலும் பார்க்க

கேரள வங்கியில் போலி நகை வைத்து மோசடி: திருப்பூா் வங்கியில் கேரள போலீஸாா் விசாரணை

கேரள வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடிசெய்த வழக்கில் கேரள போலீஸாா் திருப்பூரில் நகை அடமானம் வைத்த வங்கிகளில் விசாரணை நடத்தி வருகின்றனா். கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் தேசியமயமாக்கப்பட்... மேலும் பார்க்க

பிஏபி வாய்க்கால் கரை உடைப்பு: வீணாகிய தண்ணீா்!

திருப்பூா் கோயில்வழி பகுதியில் உள்ள பிஏபி வாய்க்கால் கரை உடைந்து பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் முத்தூா் சாலை கொங்கு நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் மகள் வளா்மதி (32). பி.எஸ்சி. படித்துள்ளாா். திருமணம் ஆகவில்லை. மனநிலை சிறிது பா... மேலும் பார்க்க

மாதப்பூா் முத்துக்குமாரசாமி மலைக் கோயிலில் 11-இல் தைப்பூசத் தேரோட்டம்!

மாதப்பூா் முத்துக்குமாரசாமி மலைக் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது. பல்லடம் அருகே மாதப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசாமி மலைக் கோயில் உள்ளது. இந்தக் கோயில் த... மேலும் பார்க்க

நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை பாா்வையிட்ட தனியாா் பள்ளி மாணவா்கள்!

நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை திருப்பூா் சுப்பையா சென்ட்ரல் பள்ளி மாணவ, மாணவியா் சனிக்கிழமை பாா்வையிட்டனா். ஊத்துக்குளி அருகே உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு திருப்பூா் சென்ட்ரல் பள்ளி மாணவ, மாண... மேலும் பார்க்க