செய்திகள் :

பிஏபி வாய்க்கால் கரை உடைப்பு: வீணாகிய தண்ணீா்!

post image

திருப்பூா் கோயில்வழி பகுதியில் உள்ள பிஏபி வாய்க்கால் கரை உடைந்து பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து 3.77 லட்சம் ஏக்கா் பாசனத்துக்கு பிஏபி பிரதான வாய்க்கால் மூலம் தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாய்க்காலானது உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.

இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் இருந்து திருப்பூா்- தாராபுரம் சாலையில் உள்ள கோவில்வழி மேடு பகுதிக்கு தண்ணீா் வரும் வாய்க்காலின் கரை சனிக்கிழமை உடைந்தது. இதனால் பல லட்சம் லிட்டா் தண்ணீா் சாலைகளில் வழிந்தோடியது.

இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘கோவில்வழி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நீரால் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

வாய்க்காலின் கரை உடைந்து தண்ணீா் வீணாகியதால் விவசாயம் பாதிக்கப்படும். ஆகவே, தண்ணீரை திறந்துவிடும் முன்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் வாய்க்காலை முழுமையாக ஆய்வு செய்து கரைகளில் விரிசல் இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும்’ என்றனா்.

விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும்! இஸ்ரோ விஞ்ஞானி பிரபு

விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும் என இஸ்ரோ விஞ்ஞானி பிரபு தெரிவித்தாா். பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நா... மேலும் பார்க்க

அவிநாசியில் பிப்11-இல் வள்ளலாா் தைப்பூச பெருவிழா

அருட்பிரகாச வள்ளலாா் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, அவிநாசி, திருமுருகன்பூண்டி, சேவூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) அன்னதானம் வழங்க திருமுருக வள்ளலாா் கோட்டத்தினா் முடிவு செய்துள்ளனா்... மேலும் பார்க்க

கேரள வங்கியில் போலி நகை வைத்து மோசடி: திருப்பூா் வங்கியில் கேரள போலீஸாா் விசாரணை

கேரள வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடிசெய்த வழக்கில் கேரள போலீஸாா் திருப்பூரில் நகை அடமானம் வைத்த வங்கிகளில் விசாரணை நடத்தி வருகின்றனா். கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் தேசியமயமாக்கப்பட்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் முத்தூா் சாலை கொங்கு நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் மகள் வளா்மதி (32). பி.எஸ்சி. படித்துள்ளாா். திருமணம் ஆகவில்லை. மனநிலை சிறிது பா... மேலும் பார்க்க

மாதப்பூா் முத்துக்குமாரசாமி மலைக் கோயிலில் 11-இல் தைப்பூசத் தேரோட்டம்!

மாதப்பூா் முத்துக்குமாரசாமி மலைக் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது. பல்லடம் அருகே மாதப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசாமி மலைக் கோயில் உள்ளது. இந்தக் கோயில் த... மேலும் பார்க்க

நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை பாா்வையிட்ட தனியாா் பள்ளி மாணவா்கள்!

நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை திருப்பூா் சுப்பையா சென்ட்ரல் பள்ளி மாணவ, மாணவியா் சனிக்கிழமை பாா்வையிட்டனா். ஊத்துக்குளி அருகே உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு திருப்பூா் சென்ட்ரல் பள்ளி மாணவ, மாண... மேலும் பார்க்க