செய்திகள் :

`2026-ல் ஆட்சியில் அமர ஆளுநரும் அண்ணாமலையும் போதும்..!' - முதல்வர் ஸ்டாலின்

post image

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை அருகில் ஆவடியில் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ``ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். பெரியார் மண்ணில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. திருத்தணியைக் காக்கப் போராடியது போல இப்போது தமிழகத்தின் உரிமையைக் காக்கும் வகையில் குரல் கொடுக்க ஒன்று கூடியுள்ளோம். தமிழகத்தை ஒன்றிய பா.ஜ.க அரசு வஞ்சிக்கிறது. மத்திய நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கையாகத்தான் இருக்கிறது.

 ஸ்டாலின்
ஸ்டாலின்

இதில், தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே எதுவுமில்லை. உழவர்களின் 4 ஆண்டுக்காலப் போராட்டத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தத் திட்டமும் இல்லை. மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்கள் இல்லை. ரயில்வேக்கு கூடுதல் நிதி இல்லை. மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்திற்கு நிதி இல்லை. பெஞ்சல், மிக்ஜாம் புயலுக்கு நிவாரணம் தரவில்லை. மதுரை எய்ம்ஸ் நிதி ஒதுக்கவில்லை. கடன் தருகிறோம் என சொல்வது நியாயமா! மத்தியில் நடப்பது ஆட்சியா அல்லது வட்டிக் கடையா? தமிழகத்தைப் பிடிக்கவில்லை அதனால்தான் நிதி கொடுக்க மறுக்கிறார்கள்.

நீங்கள் நிதி தராமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம். நீங்கள் வஞ்சிப்பவர்கள். நாங்கள் வாழ வைப்பவர்கள். பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது மத்திய அரசிடம் என்ன எதிர்பார்த்தாரோ... அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். தமிழக வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் கெட்ட நோக்கத்துடன் ஆளுநர் பேசி வருகிறார். தொழிற்சாலைகள் வெளி மாநிலத்திற்குப் போவதாக எந்த ஆதாரத்தில் பேசுகிறார். மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டுகிறது. ஆளுநர் பாராட்டு எங்களுக்குத் தேவையில்லை. நம்மை 2026-ல் ஆட்சியில் அமர வைக்க, ஆளுநரும், அண்ணாமலையும் போதும்.

அண்ணாமலை - தமிழ்நாடு ஆளுநர்

தமிழக வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. குழப்பம் ஏற்படுத்த முடியுமா எனப் பார்க்கிறார்கள். புதுப்புது பிரச்னையை கிளப்பி கலவரம், வன்முறை செய்யலாம் எனச் செயல்படுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழர் என்ற உணர்வோடு மக்கள் வாழ்கிறார்கள். முடிந்தவரைக்கும் தடையை ஏற்படுத்துங்கள். நாங்கள் அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து தமிழகத்தை வளர்த்தெடுப்போம். உங்களுக்கும், உங்களுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க-வுக்கும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." எனப் பேசினார்.

'மத்திய அரசுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்...' - மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் ராஜினாமா

கலவரம், இன்டர்நெட் தடை, லாக்டவுன் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக, மணிப்பூரின் அன்றாடம் ஆகிவிட்டது. மணிப்பூர் மாநிலத்தின் ஆட்சியில் இருப்பது பாஜக அரசு. 'கலவரங்கள் குறித்து பெரிதாக எந்த நடவடிக்கைகளும் எடுக்... மேலும் பார்க்க

` மின்சாரம் துண்டிப்பு; சூரிய ஒளி வராத தனிச்சிறை' - உருக்கமான கடிதம் எழுதிய இம்ரான் கான்

ஊழல் வழக்கில் கைதாகி தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.Second Open Letter to the Chief of Army Staff by Former Prime Minister Imran Khan - February 8,... மேலும் பார்க்க

பிளாஸ்டிக்கை தடை செய்த ஜோ பைடன்: தடையை நீக்கிய ட்ரம்ப் - சொல்லும் காரணம் தெரியுமா?

முன்னாள் அதிபர் ஜோ பைடன், 2035-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் அனைத்து பிளாஸ்டிக்குகளையும் படிப்படியாக ஒழிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் முதல்படியாக பட... மேலும் பார்க்க

'தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது..?' - புள்ளிவிவரங்களை அடுக்கும் ஆர்.எஸ்.பாரதி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில்..."மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்காததால் மக்கள் மத்திய அரசு மீது கோபமாக இருக்கிறார்கள். ... மேலும் பார்க்க

Trump: 'புதின் ஆசை இதுவே...' - நண்பரை பற்றி மனம் திறக்கும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் - இருவரும் நல்ல நண்பர்கள் என்பது உலகம் அறிந்ததே.'நான் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பே, ரஷ்ய - உக்ரைன் போரை நிறுத்துவ... மேலும் பார்க்க