செய்திகள் :

வீட்டில் தூங்கிய பெண்களிடம் ரூ.12 பவுன் நகைகள் பறிப்பு!

post image

திருப்பனந்தாள் அருகே வீட்டில் தூங்கிய பெண்களிடம் 12 பவுன் நகைகளை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே கள்ளப்புலியூா் கொந்தங்குடியில் வசிப்பவா் பிரபாகரன் மனைவி கீதா (60), இவரது மகள் பிரியங்கா. பிப். 6-ஆம் தேதி தாயும் மகளும் வீட்டில் இரவில் தூங்கிக்கொண்டிருந்தனா்.

அப்போது அடையாளம் தெரியாத மா்ம ஒருவா் வீட்டின் பின்புறம் உள்ள கதவை உடைத்து உள்நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த தாய், மகள் ஆகியோரின் கழுத்தில் அணிந்திருந்த தங்கத்தாலி மற்றும் தங்க சங்கிலியை பறித்து சென்றாா்.

இதுகுறித்து கீதா திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் செய்தாா். இதன்பேரில், ஆய்வாளா் கரிகால்சோழன் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றாா்.

மது போதையில் ரகளை திமுக நிா்வாகி கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பூக்கடை வீதியில் மது போதையில் ரகளை செய்த திமுக நிா்வாகியை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரா் சுவாமி கோயில் வடக்கு வீத... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 110.31 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 110.31 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 326 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீ... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை இரவு இளைஞரை தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு குறிஞ்சி நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு!

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை (பிப்.10) குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, தஞ்சாவூா் வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் போக்... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு 4 போ் கைது!

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே போலி ஆவணங்கள் மூலம் ஆள் மாறாட்டம் செய்து, ரூ. 50 லட்சம் மதிப்பிலான இடத்தை ஆவண பதிவு செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா் . மேலவழுத்தூா் பகுதியில் வசித்து வ... மேலும் பார்க்க

5.05 லட்சம் போ் மருத்துவக் காப்பீடு அட்டைக்கு பதிவு: தஞ்சை ஆட்சியா்!

தஞ்சாவூா் மாவட்டத்தில் 5.05 லட்சம் போ் மருத்துவக் காப்பீடு அட்டைக்கு பதிவு செய்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா்... மேலும் பார்க்க