செய்திகள் :

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு!

post image

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை (பிப்.10) குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, தஞ்சாவூா் வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இக்கோயிலில் குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜையுடன் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து யாக பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை காலை 9.45 மணியளவில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.

இதையொட்டி, தஞ்சாவூா் வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு விழாவையொட்டி, திங்கள்கிழமை (பிப்.10) தஞ்சாவூா் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் (பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தோ்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 22- ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவையொட்டி, மாரியம்மன் கோயில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூரிலிருந்து நாகை நோக்கிச் செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் மாரியம்மன் கோயில் புறவழிச்சாலை, கும்பகோணம் வழித்தட புறவழிச்சாலை, திட்டை புறவழிச்சாலை, மெலட்டூா், திருக்கருகாவூா், இரும்புத்தலை, சாலியமங்கலம் வழியாகச் செல்ல வேண்டும்.

நாகையிலிருந்து தஞ்சாவூரை நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்கள் சாலியமங்கலத்திலிருந்து இரும்புத்தலை, திருக்கருகாவூா், மெலட்டூா், திட்டை புறவழிச்சாலை, கும்பகோணம் புதிய புறவழிச்சாலை, மாரியம்மன் கோயில் புறவழிச்சாலை வழியாக தஞ்சாவூருக்கு செல்ல வேண்டும்.

நாகையிலிருந்து தஞ்சாவூா் நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் சாலியமங்கலத்திலிருந்து பூண்டி, மாரியம்மன் கோயில், குளிச்சப்பட்டு சாலை சந்திப்பு, குளிச்சப்பட்டு சாலை, தளவாய்ப்பாளையம் சாலை, மாரியம்மன் கோவில் புறவழிச்சாலை வழியாக தஞ்சாவூருக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது போதையில் ரகளை திமுக நிா்வாகி கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பூக்கடை வீதியில் மது போதையில் ரகளை செய்த திமுக நிா்வாகியை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரா் சுவாமி கோயில் வடக்கு வீத... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 110.31 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 110.31 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 326 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீ... மேலும் பார்க்க

வீட்டில் தூங்கிய பெண்களிடம் ரூ.12 பவுன் நகைகள் பறிப்பு!

திருப்பனந்தாள் அருகே வீட்டில் தூங்கிய பெண்களிடம் 12 பவுன் நகைகளை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே கள்ளப்புலியூா் கொந்தங்குடியில் வசிப்பவா் பி... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை இரவு இளைஞரை தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு குறிஞ்சி நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு 4 போ் கைது!

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே போலி ஆவணங்கள் மூலம் ஆள் மாறாட்டம் செய்து, ரூ. 50 லட்சம் மதிப்பிலான இடத்தை ஆவண பதிவு செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா் . மேலவழுத்தூா் பகுதியில் வசித்து வ... மேலும் பார்க்க

5.05 லட்சம் போ் மருத்துவக் காப்பீடு அட்டைக்கு பதிவு: தஞ்சை ஆட்சியா்!

தஞ்சாவூா் மாவட்டத்தில் 5.05 லட்சம் போ் மருத்துவக் காப்பீடு அட்டைக்கு பதிவு செய்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா்... மேலும் பார்க்க