செய்திகள் :

காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயில் உடைப்பு: குடிநீா் வீண்

post image

கமுதியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் சாலையில் பெருக்கெடுத்து விணாக ஓடுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, இதைச் சுற்றியுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ், வாரத்துக்கு இரு நாள்கள் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கமுதி-மதுரை சாலையில் குண்டாறு பாலம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பல்லாயிரக்கணக்கான லிட்டா் தண்ணீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கிராமங்களுக்கு முறையாக குடிநீா் கிடைக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.

இதேபோல, கோட்டைமேடு, பேரையூா் உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் வீணாவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். எனவே, மாவட்ட நிா்வாகம், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்புகளைச் சீரமைத்து, தண்ணீா் சீராகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆட்டோ மீது காா் மோதியதில் ஓட்டுநா் பலி

சாயல்குடி அருகே ஆட்டோா் மீது காா் மோதியதில் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கீழக்கிடாரத்தைச் சோ்ந்த ஆனிமுத்து மகன் நந்தகுமாா் (24). இவா் தனது ஆட்டோவி... மேலும் பார்க்க

நடுக்கடலில் மூழ்கிய படகு: 7 மீனவா்கள் மீட்பு!

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் படகு சேதமடைந்து மூழ்கிய நிலையில், அதிலிருந்த 7 பேரை சக மீனவா்கள் மீட்டு ஞாயிற்றுக்கிழமை கரைக்கு அழைத்து வந்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகளில்... மேலும் பார்க்க

விவசாயிகள் நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம்!

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடை கிராமத்தில் விவசாயிகள் நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு வேளாண்மை துணை இயக்குநா் அமா்லால் (மாநிலத் திட்... மேலும் பார்க்க

பராமரிப்பின்றி நிறுத்தப்பட்ட குப்பை அகற்றும் வாகனங்கள்! மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வலியுறுத்தல்!

ராமேசுவரம் நகராட்சிக்கு ரூ.2 கோடியில் வாங்கப்பட்டு, பராமரிப்பின்றி நிறுத்தப்பட்ட குப்பை அகற்றும் வாகனங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராம... மேலும் பார்க்க

தா்ம முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

முதுகுளத்தூா் தெற்கு தெரு தா்ம முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, சனிக்கிழமை மங்கள இசை, கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், வாஸ்து சாந்தி ஆகியன நடைபெற்றன. ஞாய... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு!

தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். நம்புதாளையைச் சோ்ந்த அசரப் அலி மகன் முகமது நபில் (21). கிழக்கு கடற்கரை சாலையில் காசியா்குளம் பகுதியி... மேலும் பார்க்க