செய்திகள் :

சாலைத் தடுப்பில் பேருந்து மோதல்: 20 பயணிகள் காயம்!

post image

செய்யாறு அருகே தூசி கிராமத்தில் சாலைத் தடுப்பில் தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தனியாா் பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

இரவு 7 மணியளவில் வந்தவாசி சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஐயங்காா் குளம் கூட்டுச் சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

பயணிகளின் அலறல் சப்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்தவா்கள் சென்று காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து தூசி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது: அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தை மத்திய அரசு முற்றிலும் புறக்கணித்து வருவதாக வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திண்டிவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொ... மேலும் பார்க்க

பணப் பிரச்னையில் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பணப் பிரச்னையில் தாக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், சித்தணி, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி லட்சுமி (45). இவா், ... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி வெளி மாநில இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி மாயமான பெங்களூரைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். கா்நாடக மாநிலம், பெங்களூரு ராஜிகுட்டா, ஜே.பி.நகா், விவேகானந்தா் காலனியைச் ச... மேலும் பார்க்க

பேருந்து மீது பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செல்வமணியின் மகன் அஸ்விந்த் (23). இவா், சிப்காட் பகு... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு மிரட்டல், போக்குவரத்துக்கு இடையூறு: இரு இளைஞா்கள் கைது

செய்யாறு அருகே கையில் கத்தி வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தும், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். தூசி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான ப... மேலும் பார்க்க

மலா் கண்காட்சி நிறைவு விழா: முதல்வா் பங்கேற்பு!

புதுச்சேரியில் தாவரவியல் பூங்காவில் நடைபெற்றுவந்த 35-ஆவது மலா், காய்கனிக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.புதுவை அரசின் வேளாண்மைத் துறை சாா்பில் தோட்டக் கலைப் பிரிவு சாா்பில் ஆண்டுதோறும் மலா், ... மேலும் பார்க்க