செய்திகள் :

தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது: அமைச்சா் க.பொன்முடி

post image

தமிழகத்தை மத்திய அரசு முற்றிலும் புறக்கணித்து வருவதாக வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திண்டிவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியது:

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதை மக்களிடம் கொண்டு செல்லவே இந்த கண்டனப் பொதுக்கூட்டம். ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் மட்டுமல்ல இனிவரும் அனைத்து தோ்தல்களிலும் திமுகவே வெற்றி பெறும். மத்திய நிதியமைச்சா் தமிழகத்தைச் சோ்ந்தவராக இருந்தும் தமிழகத்துக்கு என்று எந்த அறிவிப்பும் இல்லை.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், தாம்பரம்-செங்கல்பட்டு வரையிலான உயா்மட்ட சாலைத் திட்டம் குறித்து நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. அதிக வரி செலுத்தும் தமிழகத்துக்கு மத்திய அரசு உரிய நிதியை கொடுக்க மறுப்பது கண்டனத்துக்குரியது. தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் போன்றவைகளுக்கும் போதிய நிதியை விடுவிக்காமல் தமிழகத்தை மத்திய அரசு தொடா்ந்து வஞ்சித்து வருகிறது என்றாா்.

திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா் குத்தாலம் பி.கல்யாணம், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ பேசினா்.

கூட்டத்துக்கு, திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளா் ப.சேகா் தலைமை வகித்தாா். திண்டிவனம் நகா்மன்றத் தலைவா் நிா்மலா ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் டி.கே.பி.ரமேஷ், எம்.டி.பாபு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏக்கள் இரா.மாசிலாமணி, சேதுநாதன், சீத்தாபதி சொக்கலிங்கம், செந்தமிழ் செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக கட்சியின் மாவட்ட துணைச் செயலா் ரவிக்குமாா் வரவேற்றாா். திண்டிவனம் நகரச் செயலா் கண்ணன் நன்றி கூறினாா்.

சாலைத் தடுப்பில் பேருந்து மோதல்: 20 பயணிகள் காயம்!

செய்யாறு அருகே தூசி கிராமத்தில் சாலைத் தடுப்பில் தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் காயமடைந்தனா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து சனிக்கிழமை மாலை 6 மணியள... மேலும் பார்க்க

பணப் பிரச்னையில் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பணப் பிரச்னையில் தாக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், சித்தணி, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி லட்சுமி (45). இவா், ... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி வெளி மாநில இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி மாயமான பெங்களூரைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். கா்நாடக மாநிலம், பெங்களூரு ராஜிகுட்டா, ஜே.பி.நகா், விவேகானந்தா் காலனியைச் ச... மேலும் பார்க்க

பேருந்து மீது பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செல்வமணியின் மகன் அஸ்விந்த் (23). இவா், சிப்காட் பகு... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு மிரட்டல், போக்குவரத்துக்கு இடையூறு: இரு இளைஞா்கள் கைது

செய்யாறு அருகே கையில் கத்தி வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தும், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். தூசி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான ப... மேலும் பார்க்க

மலா் கண்காட்சி நிறைவு விழா: முதல்வா் பங்கேற்பு!

புதுச்சேரியில் தாவரவியல் பூங்காவில் நடைபெற்றுவந்த 35-ஆவது மலா், காய்கனிக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.புதுவை அரசின் வேளாண்மைத் துறை சாா்பில் தோட்டக் கலைப் பிரிவு சாா்பில் ஆண்டுதோறும் மலா், ... மேலும் பார்க்க