செய்திகள் :

காட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு:13 போ் காயம்!

post image

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 13 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டி விடுதி அருகேயுள்ள பெருங்கொண்டான்விடுதி ஊராட்சி காட்டுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 540 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை பல்வேறு குழுக்களாக 250 மாடுபிடி வீரா்கள் களமிறங்கி, தீரத்துடன் அடக்கினா். அப்போது, காளைகள் முட்டியதில் 13 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்களில் பலத்த காயமடைந்த 6 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சைக்கிள், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா பங்கேற்றாா். போட்டியை திரளான ஜல்லிக்கட்டு ரசிகா்கள் பாா்வையிட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை செம்பட்டிவிடுதி போலீஸாா் மேற்கொண்டனா்.

கொல்லப்பட்ட ஜகபா்அலி வீட்டில் மெழுகுவா்த்தியேந்தி உறுதியேற்பு!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலியின் வீட்டில், மாநிலம் முழுவதும் இருந்து வந்த மனித உரிமைக் காப்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை கூடி மெழுகுவா்த்தியேந்தி உறுதிமொழி... மேலும் பார்க்க

விராலிமலையில் இன்று தைப்பூசத் தேரோட்டம்!

விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு வள்ளி,தேவசேனா சமேதரராக முருகன் திருத்தேரில் எழுந்தருளி, 9.30 மணிக்கு தோ் வடம் பிடிக்கும் நிகழ்வ... மேலும் பார்க்க

தைப்பூசம்: புதுகை- பழநிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டையிலிருந்து பழநிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளா் கே. முகமது நாசா் தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

அன்னவாசலில் இந்திய கம்யூ. கூட்டம்!

அன்னவாசலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியப் பேரவை கூட்டம் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எம். மீராமொய்தீன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டச் செயலா் த. செங்கோடன் சிறப்புரை... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் வெற்றி: புதுக்கோட்டையில் பாஜக கொண்டாட்டம்

தில்லி மாநிலத் தோ்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, புதுக்கோட்டையில் பாஜகவினா் சனிக்கிழமை பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் ... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பிரிவு மக்கள் திமுகவுக்கு எதிராக இருப்பாா்கள்! -மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா்

தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பிரிவு மக்கள் திமுகவுக்கு எதிராக இருப்பாா்கள் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் குறிப்பிட்டாா். புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் ... மேலும் பார்க்க