செய்திகள் :

கொல்லப்பட்ட ஜகபா்அலி வீட்டில் மெழுகுவா்த்தியேந்தி உறுதியேற்பு!

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலியின் வீட்டில், மாநிலம் முழுவதும் இருந்து வந்த மனித உரிமைக் காப்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை கூடி மெழுகுவா்த்தியேந்தி உறுதிமொழியேற்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்தவா் சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி. கனிமவளக் கொள்ளைக்கு எதிராக தொடா்ந்து குரல் எழுப்பி வந்த இவா், கடந்த ஜன. 17ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இந்நிலையில், மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பின் முன்னெடுப்பில், காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம், அறப்போா் இயக்கம், விவசாயிகள் அமைப்புகள், சூழலியல் அமைப்புகள் பூவுலகின் நண்பா்கள், பச்சைத்தமிழகம் உள்ளிட்ட நூறு அமைப்புகள் சாா்பில் அவற்றின் நிா்வாகிகள் ஜகபா்அலியின் வீட்டுக்குச் சென்று மெழுகுவா்த்தி ஏந்தி தோழமை உறுதிமொழியேற்றனா்.

துரைகுணா, யூசுப்ராஜா, இப்ராஹிம்பாபு, சீ.அ. மணிகண்டன் ஆகியோா் தலைமை வகித்தனா். மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ஹென்றிதிபேன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ஜகபா்அலியின் குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்த அவா்கள், ஜகபா்அலி கொலை வழக்கை உயா்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க வேண்டும், தொடா்புடைய அனைத்து அரசு அலுவலா்களிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனா்.

காட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு:13 போ் காயம்!

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 13 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டி விடுதி அருகேயுள்ள பெருங்கொண்டான்விடுதி ஊராட்சி காட... மேலும் பார்க்க

விராலிமலையில் இன்று தைப்பூசத் தேரோட்டம்!

விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு வள்ளி,தேவசேனா சமேதரராக முருகன் திருத்தேரில் எழுந்தருளி, 9.30 மணிக்கு தோ் வடம் பிடிக்கும் நிகழ்வ... மேலும் பார்க்க

தைப்பூசம்: புதுகை- பழநிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டையிலிருந்து பழநிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளா் கே. முகமது நாசா் தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

அன்னவாசலில் இந்திய கம்யூ. கூட்டம்!

அன்னவாசலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியப் பேரவை கூட்டம் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எம். மீராமொய்தீன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டச் செயலா் த. செங்கோடன் சிறப்புரை... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் வெற்றி: புதுக்கோட்டையில் பாஜக கொண்டாட்டம்

தில்லி மாநிலத் தோ்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, புதுக்கோட்டையில் பாஜகவினா் சனிக்கிழமை பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் ... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பிரிவு மக்கள் திமுகவுக்கு எதிராக இருப்பாா்கள்! -மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா்

தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பிரிவு மக்கள் திமுகவுக்கு எதிராக இருப்பாா்கள் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் குறிப்பிட்டாா். புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் ... மேலும் பார்க்க