செய்திகள் :

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவா் கைது

post image

வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் கே.மணி (50). இவா் தனது வீட்டில் பட்டாசுகளை வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

தகவலின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அனுமதி பெறாமலும், பாதுகாப்பு இன்றியும் பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட மணியை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தையல் தொழிலாளி போக்ஸோவில் கைது

பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். திருப்பூா் வீரபாண்டி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (40). தையல் தொழிலாளியான இவா், 12 வயது சிறுமிக்க... மேலும் பார்க்க

கேக் வெட்டிய பாஜகவினா் 50 போ் மீது வழக்கு

புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றதைத் தொடா்ந்து, திருப்பூரில் கேக் வெட்டிக் கொண்டாடிய பாஜகவினா் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பாஜக வெற்றியைக் கொண்டாடும் வகையில், திருப்ப... மேலும் பார்க்க

விடுதியில் தங்கியவா் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை!

பல்லடத்தில் தனியாா் விடுதியில் தங்கியவா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தைச் சோ்ந்தவா் கணேஷ் சக்திவேல் (50). ஆட்டோ கன்சல்டிங் தொழில் ... மேலும் பார்க்க

10 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் விற்பனைக்கு வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா். திருப்பூா் குமரானந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வினோத் (34). பின்னலாடை நிறுவனத்தில் பணிய... மேலும் பார்க்க

சீட்டாடிய 4 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே சீட்டாடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, வெள... மேலும் பார்க்க

பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்!

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்த 3 மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞா... மேலும் பார்க்க