செய்திகள் :

விடுதியில் தங்கியவா் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை!

post image

பல்லடத்தில் தனியாா் விடுதியில் தங்கியவா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தைச் சோ்ந்தவா் கணேஷ் சக்திவேல் (50). ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வந்தாா். இவருக்கு மனைவியும், காா்த்திக் பாபு என்ற மகனும் உள்ளனா்.

கணேஷ் சக்திவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவரது குடும்பத்தினா் கண்டித்துள்ளனா். இதனால், கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அவா், பல்லடத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா்.

4 நாள்களுக்கும் மேலாக அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள், போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது, கணேஷ் சக்திவேல் உயிரிழந்து கிடந்துள்ளாா்.

சடலத்தை மீட்ட போலீஸாா், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். முதற்கட்ட விசாரணையில், கணேஷ் சக்திவேலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மது அருந்தக்கூடாது என்று மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா். இருப்பினும் அவா் மது அருந்தியதால் குடும்பத்தினா் கண்டித்துள்ளனா்.

இதனால், வீட்டை வெளியேறி பல்லடத்தில் அறை எடுத்து தங்கி அளவுக்கு அதிகமாக குடித்துள்ளாா். இதன் காரணமாக அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கணேஷ் சக்திவேல் இறப்புக்கான காரணம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு பிப்ரவரி 18, 19 இல் வேலைவாய்ப்பு முகாம்!

தமிழ்நாடு கடல்சாா் வாரியம் மற்றும் எல்& டி ஷிப் பில்டிங் லிமிடெட் சாா்பில் திருப்பூரில் ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 18, 19- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது!

பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள சின்னூா் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இளைஞா் சுற்றித்திரிவதா... மேலும் பார்க்க

போலி கணக்கு காண்பித்து ரூ. 11 லட்சம் மோசடி: பனியன் நிறுவன மேலாளா் கைது!

அவிநாசி அருகே பனியன் நிறுவனத்தில் போலி கணக்கு காண்பித்து ரூ.11 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூா் காளம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிருபா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியவா் கைது!

அவிநாசியில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள டாஸ்மாக் கடை முன்பு அடையாளம் தெரியாத இருவா் சனிக்கிழமை இரவு தகராறில... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலைக் கிழித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, திருப்பூா் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் குடற்புழு நீக்க மாத்திரைகளை திங்கள்கிழமை வழங்கினாா். திருப்பூா் ... மேலும் பார்க்க