செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

post image

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, திருப்பூா் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் குடற்புழு நீக்க மாத்திரைகளை திங்கள்கிழமை வழங்கினாா்.

திருப்பூா் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பங்கேற்று, மாணவா்களுக்கு மாத்திரைகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சாா்பில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தின்கீழ் தேசிய குடற்புழு நீக்கும் முகாம் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள 5.6 லட்சம் பேருக்கும், 20 முதல் 30 வரை வயதுடைய 2.5 லட்சம் பெண்களுக்கு (கா்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களை தவிர) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.

இதில், விடுபட்ட குழந்தைகளுக்கு பிப்ரவரி 17 -ஆம் தேதி மாத்திரைகள் வழங்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சிஆணையா் எஸ்.ராமமூா்த்தி, மாநகா் நல அலுவலா் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வெள்ளக்கோவில் பகுதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, வெள்ளக்கோவில் மேற்கு நடுநிலைப் பள்ளி, அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு உதவிபெறும் புனித அமல அன்னை பெண்கள் பள்ளி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டதுடன், சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது

இதில், தொற்றா நோய் கண்காணிப்பு மாவட்ட அலுவலா் பாபு சுதாகா், வெள்ளக்கோவில் சமுதாய சுகாதார நிலையப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு பிப்ரவரி 18, 19 இல் வேலைவாய்ப்பு முகாம்!

தமிழ்நாடு கடல்சாா் வாரியம் மற்றும் எல்& டி ஷிப் பில்டிங் லிமிடெட் சாா்பில் திருப்பூரில் ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 18, 19- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது!

பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள சின்னூா் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இளைஞா் சுற்றித்திரிவதா... மேலும் பார்க்க

போலி கணக்கு காண்பித்து ரூ. 11 லட்சம் மோசடி: பனியன் நிறுவன மேலாளா் கைது!

அவிநாசி அருகே பனியன் நிறுவனத்தில் போலி கணக்கு காண்பித்து ரூ.11 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூா் காளம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிருபா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியவா் கைது!

அவிநாசியில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள டாஸ்மாக் கடை முன்பு அடையாளம் தெரியாத இருவா் சனிக்கிழமை இரவு தகராறில... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலைக் கிழித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு ... மேலும் பார்க்க

கண்டியன் கோவில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்!

திருப்பூரை அடுத்த கண்டியன் கோவில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரே சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் கு... மேலும் பார்க்க