செய்திகள் :

கேரள வங்கியில் போலி நகை வைத்து மோசடி: திருப்பூா் வங்கியில் கேரள போலீஸாா் விசாரணை

post image

கேரள வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடிசெய்த வழக்கில் கேரள போலீஸாா் திருப்பூரில் நகை அடமானம் வைத்த வங்கிகளில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக திருச்சி மாவட்டம், முசிறியைச் சோ்ந்த மாதா ஜெயகுமாா் (34) பணியாற்றினாா். இவா் ஓராண்டுக்கு முன் எா்ணாகுளம் வங்கிக் கிளைக்கு மாற்றப்பட்டாா். கடந்த 2024- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய மேலாளா் வடகரையில் உள்ள வங்கிக் கிளைக்கு வந்து பொறுப்பேற்றாா்.

அங்கு லாக்கரில் இருந்த நகைகளை சரிபாா்த்தபோது 26 கிலோ நகைகள் போலியாக இருப்பது தெரியவந்தது. இதனிடையே, வங்கியின் முன்னாள் மேலாளா் மாதா ஜெயக்குமாா் தலைமறைவானாா். இது குறித்து வங்கி நிா்வாகம் அளித்த புகாரின்பேரில், வடகரை போலீஸாா் விசாரணை நடத்தி மாதா ஜெயக்குமாரை கைது செய்தனா்.

அவரிடம் விசாரித்தபோது, கையாடல் செய்த நகைகளை திருப்பூரில் உள்ள தனியாா் வங்கிக் கிளைகளில் அடமானம் வைத்து பணத்தை பெற்றது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் புஷ்பா ரவுண்டானா அருகே அவிநாசி சாலையில் உள்ள தனியாா் வங்கிக் கிளை, காங்கயம் சாலையில் உள்ள மற்றொரு வங்கிக் கிளையிலும் விசாரணை நடத்தி 15 கிலோ நகைகளை மீட்டனா்.

இதனிடையே, திருப்பூரில் உள்ள வங்கியில் நகையை அடமானம் வைப்பதற்கு திருப்பூா் சந்திராபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் (29) என்பவா் மாதா ஜெயக்குமாருக்கு உதவியது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு காா்த்திக்கை கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இதன் பின்னா் அவரைக் காவலில் எடுத்த கோழிக்கோடு போலீஸாா், கடந்த 2 நாள்களாக திருப்பூரில் உள்ள தனியாா் வங்கிகளுக்கு அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும்! இஸ்ரோ விஞ்ஞானி பிரபு

விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும் என இஸ்ரோ விஞ்ஞானி பிரபு தெரிவித்தாா். பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நா... மேலும் பார்க்க

அவிநாசியில் பிப்11-இல் வள்ளலாா் தைப்பூச பெருவிழா

அருட்பிரகாச வள்ளலாா் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, அவிநாசி, திருமுருகன்பூண்டி, சேவூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) அன்னதானம் வழங்க திருமுருக வள்ளலாா் கோட்டத்தினா் முடிவு செய்துள்ளனா்... மேலும் பார்க்க

பிஏபி வாய்க்கால் கரை உடைப்பு: வீணாகிய தண்ணீா்!

திருப்பூா் கோயில்வழி பகுதியில் உள்ள பிஏபி வாய்க்கால் கரை உடைந்து பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் முத்தூா் சாலை கொங்கு நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் மகள் வளா்மதி (32). பி.எஸ்சி. படித்துள்ளாா். திருமணம் ஆகவில்லை. மனநிலை சிறிது பா... மேலும் பார்க்க

மாதப்பூா் முத்துக்குமாரசாமி மலைக் கோயிலில் 11-இல் தைப்பூசத் தேரோட்டம்!

மாதப்பூா் முத்துக்குமாரசாமி மலைக் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது. பல்லடம் அருகே மாதப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசாமி மலைக் கோயில் உள்ளது. இந்தக் கோயில் த... மேலும் பார்க்க

நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை பாா்வையிட்ட தனியாா் பள்ளி மாணவா்கள்!

நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை திருப்பூா் சுப்பையா சென்ட்ரல் பள்ளி மாணவ, மாணவியா் சனிக்கிழமை பாா்வையிட்டனா். ஊத்துக்குளி அருகே உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு திருப்பூா் சென்ட்ரல் பள்ளி மாணவ, மாண... மேலும் பார்க்க