செய்திகள் :

`பாதி விலைக்கு ஸ்கூட்டர்' - நம்பவைத்து ரூ.500 கோடி மோசடி; கிளப்... ஆடம்பர வாழ்க்கை... சிக்கிய நபர்!

post image

கேரள மாநிலம், தொடுபுழாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன். பாதி விலைக்கு ஸ்கூட்டர்கள் வழங்க உள்ளதாகக் கூறி கேரளா முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் அனந்த கிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கேரளாவை உலுக்கியுள்ள இந்த மோசடி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அனந்து கிருஷ்ணன் யார், அவர் மோசடியில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "2019-ம் ஆண்டு வீட்டுக்கு அருகே காளான் சாகுபடி செய்யும் பிசினஸை தொடங்கினார் அனந்து கிருஷ்ணன். அதில் நல்ல லாபம் கிடைத்ததை அடுத்து பிசினஸை விரிவுபடுத்தினார். 2020 ஓணம் பண்டிகைக்கு பாதி விலைக்கு மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். 3000 ரூபாய்க்கான பொருட்கள் பாதி விலைக்கு வழங்குவதாக சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி மக்களை கவர்ந்தார். மொத்த விலைக்கு மளிகைப் பொருட்களை வாங்கி பேக் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார். அந்த திட்டம் சக்சஸ் ஆனதை தொடர்ந்து விவசாயம் செய்வதற்கான கருவிகள் தையல் மிஷின், குடிநீர் சுத்திகரிப்பான், லேப்டாப் போன்றவை பாதி விலைக்கு வழங்கும் திட்டத்தை விளம்பரப்படுத்தினார். மக்களை நம்பவைப்பதற்காக பலருக்கும் பாதி விலையில் பொருட்களை வழங்கினார்.

பாதிவிலைக்கு பொருட்கள் வழங்குவதாக மோசடியில் ஈடுபட்ட அனந்து கிருஷ்ணன்

தையல் மிஷின் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக ஆர்டர் செய்து குறைந்த விலையில் வாங்கிவிட்டு அதை பாதி விலைக்கு வழங்குவதாக நாடகம் நடத்தியுள்ளார். பாதிவிலைக்கு பொருட்களை வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகளை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது அனந்து கிருஷ்ணனின் வாடிக்கை. மோசடி பணத்தில் ஒருபகுதியை அரசியல் பிரமுகர்களுக்கும் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. 2022-ம் ஆண்டு ஒரு சொசைட்டியை தொடங்கினார். பெரும் நிறுவனங்கள் சமூக பணிக்காக வழங்கும் சி.எஸ்.ஆர் ஃபண்ட் மூலம் ஸ்கூட்டர் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பாதிவிலைக்கு வழங்குவதாக அறிவித்தார்.

பாதிவிலை பொருட்களை வாங்கிவிரும்பும் மக்கள் பணம் செலுத்தி காத்திருக்க வேண்டும். சி.எஸ்.ஆர் பணம் வந்ததும் அவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என கூறிவந்தார். மக்கள் பணம் செலுத்த வசதியாக எர்ணாகுளம் பனம்பிள்ளி நகரில் தனது தலைமை அலுவலகத்தை திறந்தார். களமசேரி, மூவாற்றுபுழா பாயிப்பிறா உள்ளிட்ட பகுதிகளிலும் பெரிய அலுவலகங்களை திறந்தார். பாயிப்பிறா அலுவலகத்தில் மட்டும் 50 ஊழியர்களை நியமித்தார். ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தொடக்கத்திலேயே தலா 30,000 ரூபாய் சம்பளம் வழங்கினார். 2 பிளாட்டுகளை வாங்கி ஊழியர்களை இலவசமாக தங்கவைத்ததுடன், உணவும் இலவசமாக வழங்கினார். இதுபோன்ற பல இடங்களிலும் அலுவலகங்கள் திறந்து, அதிக சம்பளத்துக்கு ஊழியர்களை நியமித்தார். ஊழியர்கள் வசிக்க பிளாட்டுகளையும், நிலங்களையும் வாங்கி குவித்தார். பல ஆடம்பர கார்களையும் வாங்கியுள்ளார்.

மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட அனந்து கிருஷ்ணன்

ஆடம்பர கிளப்புகளில் உறுப்பினர் ஆகி தினமும் கிளப்புகளுக்குச் சென்றுவந்தார் அனந்து கிருஷ்ணன். பர்சனல் உதவியாளர்களாக இரண்டு பெண்களை எப்போதும் உடன் வைத்திருப்பார். கைதுசெய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு இன்னோவா கிறிஸ்டா கார் ஒன்றை வாங்கியுள்ளார். பாதி விலைக்கு ஸ்கூட்டர் வழங்குவதாக அறிவித்த அனந்து கிருஷ்ணனின் 19 வங்கிக் கணக்குகளில் சுமார் 500 கோடி ரூபாய் வந்துள்ளது. 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் இந்த பணம் வங்கிக் கணக்குக்குச் சென்றுள்ளது. ஆனால் தற்போது சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வங்கிக் கணக்கில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவருக்கும் ஹவாலா கும்பலுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரை 18,000 ஸ்கூட்டர்கள் பாதிவிலைக்கு வழங்கியதாகவும் அவர் கூறுகிறார். அதே சமயம் சில நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் ஃபண்ட் வழங்காததால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என கூறிவருகிறார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

இதயத் துடிப்பை நிறுத்திய 4 மாத கரு - ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்

வேலூர் அருகே வந்துகொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவரை ஓடும் ரயிலில் இருந்தும் கீழே தள்ளிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறத... மேலும் பார்க்க

மனைவியுடன் பழகுவதைக் கண்டித்த கணவன் கொலை; -ரோட்டில் அரிவாளுடன் குரூப் டான்ஸ் ஆடிய கொலையாளிகள்...

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் சந்துரு. கட்டிடத் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியப்பன் என்பவருடன் தினமும் வேலைக்குச் செல்வது வழக்கம். இந்... மேலும் பார்க்க

``சந்தேகத்தில் தண்டிக்க முடியாது'' -சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு; 20 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் விடுதலை

மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்தில் வசிப்பவர் ரஞ்சித் மானே. இவர் கடந்த 2003-ம் ஆண்டு தன்னுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த லிவ் இன் பார்ட்னரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் 2... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மக்களை அச்சுறுத்தி தொடர் வழிப்பறி - 2 திருடர்களுக்கு 6 ஆண்டுகள் சிறை

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (37). மகாவீர் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). இருவரும் சேர்ந்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி வந்தனர்.க... மேலும் பார்க்க

2 இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை - அரக்கோணம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள ஒருக் கிராமத்தில் கடந்த 30-12-2021 அன்று இரு இளைஞர்கள் சிறுமி ஒருவரைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.இந்த கொடூரம் தொடர்பாக, அரக்கோணம் அனை... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: சிறுமியின் தாய், விசிக மா.செ குற்றவாளிகள் - குற்றப்பத்திரிகை விவரங்கள்

கலவர வழக்குகள்ளக்குறிச்சி, கனியாமூர்கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதையடுத்து அது தற்க... மேலும் பார்க்க