தில்லியின் அடுத்த முதல்வர் யார்? பாஜக இன்று ஆலோசனை!
தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றியடைந்துள்ள நிலையில், தில்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்ய பாஜக இன்று(பிப். 9)ஆலோசனை நடத்தவுள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
ஆம் ஆத்மியின் அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின், செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பலரும் அதிா்ச்சித் தோல்வி அடைந்தனர்.
2020 தோ்தலில் எட்டு இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, இம்முறை கூடுதலாக 40 இடங்களில் வென்றுள்ளது.
இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்!
இந்நிலையில், தில்லியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க ஆயத்தமாகி வரும் பாஜக, அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடத்துகிறது.
முதல்வர் போட்டியில், அரவிந்த் கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங், சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்சுரி ஸ்வராஜ், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா குப்தா உள்ளிட்டோர் உள்ளனர்.
மேலும் மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, பாஜக எம்பி மனோஜ் திவாரி ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.