செய்திகள் :

"பிஜாப்பூரில் மிகப்பெரிய வெற்றி": பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு

post image

புதுதில்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதற்காக பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்துள்ளார்.

நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள், இந்தியாவை நக்சலைட்டு இல்லாத நாடாக மாற்றுவதில் "பெரிய வெற்றி" என்று உள்துறை அமைச்சர் ஷா விவரித்தார்.

"இந்தியாவை நக்சலைட்டு இல்லாத நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளில், பிஜாப்பூரில் பாதுகாப்புப் படையினர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த நடவடிக்கையில் 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன," என்று அமித் ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நக்சலைட்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையின் போது நமது துணிச்சலான வீரர்கள் 2 பேரை இழந்துள்ளோம். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த அந்த மாவீரர்களுக்கு தேசம் எப்போதும் கடன்பட்டிருக்கும். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஷா கூறினார்.

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: மத்திய அரசின் அதிர்ச்சி பதில்

"2026 மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்சல் தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிப்போம், நக்சலிசத்தால் நாட்டின் எந்தவொரு குடிமகனும் தங்கள் உயிரை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வோம்," என்று அவர் மேலும் கூறினார்.

நக்சலைட்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையின் போது காயமடைந்த 2 வீரர்களும் சம்பவ இடத்தில் இருந்து விமானம் மூலம் ராயப்பூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் தற்போது ஆபத்தில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது, மற்றொருவருக்கு தலை மற்றும் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

விமானப் படையின் மகா கும்பமேளா இது: விமான கண்காட்சியை துவக்கி வைத்த ராஜ்நாத்!

பெங்களூருவில் ஏரோ இந்தியா - 2025 விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியை இன்று (பிப்.10) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.ஏரோ இந்தியா கண்காட்சியில் வெளிநாடுகளைச் சோ்ந... மேலும் பார்க்க

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டார். மேலும் பார்க்க

தனம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

நடிகை சத்யா மற்றும் ஸ்ரீகுமார் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் ‘தனம்’ தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சத்யா. தற்போது சன் ... மேலும் பார்க்க

அதிமுக பலவீனம் அடையக் கூடாது: திருமாவளவன்

அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பா... மேலும் பார்க்க

தில்லி தோ்தல் முடிவுகள் பிகார் தேர்தலில் எதிரொலிக்காது: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக பெற்றிருக்கும் வெற்றி, இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ராஷ்ட்ரீய ஜ... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: மத்திய அரசின் அதிர்ச்சி பதில்

புது தில்லி: உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் சோ்ந்த இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளாா்.இது த... மேலும் பார்க்க