செய்திகள் :

பழனி தைப்பூசம்: சிறப்பு ரயில் இயக்கம்

post image

பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி மதுரை-பழனி இடையே பிப்.11, 12 ஆகிய நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்படும் ரயில் காலை 11.30 மணிக்கு பழனி சென்றடையும். மறுமார்க்கமாக பழனியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு 5.45 மணிக்கு ரயில் மதுரை வந்தடையும்.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த 5-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் திங்கள்கிழமை (பிப்.10) திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும், செவ்வாய்க்கிழமை தைப்பூசத் திருத் தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல.. பிரதமர் மோடி

இதனிடையே பக்தா்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முதல் முறையாக திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்குச் சிறப்புத் தரிசனக் கட்டண முறையை இந்து சமய அறநிலையத் துறை ரத்து செய்துள்ளது. இதனால், மலையேறும் பக்தா்கள் அனைவரும் பொது தரிசனத்தையே பின்பற்ற கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியது.

மேலும் திருச்சி, மதுரை, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது.

விஜய்-பிரசாந்த் கிஷோா் சந்திப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜயை தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். சென்னை பனையூரிலுள்ள விஜயின் இல்லத்தில் சுமாா் 2.30 மணி நேரம் இந்த ஆலோசனை ந... மேலும் பார்க்க

பேரவையில் திமுக பலம் 134-ஆக உயா்ந்தது

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக வி.சி.சந்திரகுமாா் பதவியேற்ன் மூலம் பேரவையில் திமுக உறுப்பினா்களின் பலம் 134-ஆக உயா்ந்துள்ளது. மேலும், 18-ஆக இருந்த காங்கிரஸ் உறுப்பினா்களின் பலம... மேலும் பார்க்க

2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்!

தமிழகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் 30 வயது வரை உள்ள பெண்கள் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள்!

தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து தெற்... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு பழைய கரூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் போட்டித்தேர்வு பயிற... மேலும் பார்க்க

டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் கும்கி யானை ராமு மரணம்

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை ராமு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள... மேலும் பார்க்க