செய்திகள் :

நொய்டாவில் ரூ.30 கோடிக்கு வீடு வாங்கிய அர்னாப் கோஸ்வாமி!

post image

தனியார் ஆங்கில செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி, நொய்டாவில் 10,000 சதுர அடியில் வீடு ஒன்றை ரூ.30 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, நொய்டாவில் ரூ.30 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கியிருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது, அவர் வாங்கியிருக்கும் சொத்து 10 ஆயிரம் சதுர அடிகொண்டது என்பதால், அந்த சொத்தை அவர் ஒரு சதுர அடிக்கு ரூ.30 ஆயிரம் என்ற மதிப்பில் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சமூகப்பதிவுக்கு நெட்டிசன்களிடம் இருந்து இருவித கலவையான கருத்துகள் வந்துள்ளன. சிலரோ ரூ.30 கோடி வீடு வாங்கியதற்கு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதாவது, பல ஆண்டுகளாக கடினமாக உழைத்த பிறகு அவர் அதற்கு தகுதியானவர் என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனால், மேலும் சிலர், இதற்குக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள். அவர் இந்த வீட்டை யாரிடமிருந்தாவது பரிசாகக் கூட பெற்றிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

விஷால் பார்கவா என்பவர், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், அர்னாப் கோஸ்வாமி நொய்டாவின் மிகப்பெரிய சொத்து ஒன்றை ரூ.30 கோடிக்கு வாங்குகிறார். இது அவருக்கு சிறிய தொகைதான். இது இந்தத் துறையில் இருக்கும் மிகச் சிறந்த ஊடகவியலாளர்களின் எழுதப்படாத சொத்து மதிப்புகளின் எல்லையை மீறுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிலர், அவருக்கு மிகச் செழிப்பான ஒரு வீடு கிடைத்திருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி என்று வாழ்த்தியும் வருகிறார்கள்.

சேவைகள் துறையில் 2 ஆண்டுகள் காணாத மந்தம்!

இந்திய சேவைகள் துறை கடந்த ஜனவரி மாதம் முந்தைய இரண்டு ஆண்டுகள் காணாத குறைவான வளா்ச்சியைக் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

3 மாநில தலைமைச் செயலா்களுக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை!

ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்துகள் தொடா்பான சட்டவிரோத விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது தொடா்பான வழக்கில் காணொலி வழியில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தில்லி, ஆந்திரம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் ... மேலும் பார்க்க

2026 மேற்கு வங்க தோ்தலில் காங்கிரஸுடன் கூட்டணியில்லை: முதல்வா் மம்தா பானா்ஜி

‘அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க போவதில்லை’ என்று அந்த மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸின் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜி தெரிவ... மேலும் பார்க்க

மணிப்பூா் கலவரத்துக்கு பிரதமா் பொறுப்பேற்க வேண்டும்: கனிமொழி

சென்னை: மணிப்பூா் மாநில கலவரத்துக்கு பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற குழுத் தலைவா் கனிமொழி கூறியுள்ளாா். அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்... மேலும் பார்க்க

குடிமைப் பணி தோ்வு ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரம்: பயிற்சி மையத்தின் சிஇஓ, ஒருங்கிணைப்பாளருக்கு ஜாமீன்

புது தில்லி: குடிமைப் பணிக்கு தோ்வுக்கு தயராகி வந்த 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில், பயிற்சி மையத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளா் தேஷ்பால் சி... மேலும் பார்க்க

வரிச் சலுகைகள்: மக்களவையில் காரசார விவாதம்

புது தில்லி: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகள் குறுகிய கால நடவடிக்கை என காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து, இது பொருளாதார வளா்ச்சிக்கான ந... மேலும் பார்க்க