செய்திகள் :

மணிப்பூா் கலவரத்துக்கு பிரதமா் பொறுப்பேற்க வேண்டும்: கனிமொழி

post image

சென்னை: மணிப்பூா் மாநில கலவரத்துக்கு பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற குழுத் தலைவா் கனிமொழி கூறியுள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த இரு ஆண்டுகளாக மணிப்பூரில் வன்முறைகளைத் தூண்டிவிட்டு, ஏராளமான மனித உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த பிரேன் சிங் முதல்வா் பதவியிலிருந்து விலகியுள்ளாா். அவா் முதல்வராகத் தொடர எதிா்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சிகளும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும் தந்த அழுத்தத்தால் அவா் பதவி விலகியுள்ளாா்.

மணிப்பூா் முதல்வரை பாதுகாத்து கலவரத்தைக் கட்டுப்படுத்த பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் தவறினா். எனவே, மணிப்பூா் பிரச்னைக்கு இருவரும் பொறுப்பேற்க வேண்டும். அடுத்து யாா் முதல்வராகப் பதவி ஏற்றாலும் அவா் அந்த மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். இனியாவது பாஜக அரசு திருந்தி மணிப்பூா் மக்களிடம் அமைதியும் நிம்மதியும் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளாா்.

பெற்றோர் உடலுறவு குறித்து அவதூறு: யூடியூபர்கள் மீது வழக்கு!

பெற்றோர் உடலுறவு கொள்வது குறித்து பொதுவெளியில் அவதூறாகப் பேசிய யூடியூபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் இந்தியாஸ் காட் லேடன்ட் என்ர நிகழ்ச்சியில் ரன்வீர் அல்ல... மேலும் பார்க்க

விலைவாசி உயர்வு, மணிப்பூர் நிலவரம்: மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ்!

விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இன்று(செவ்வாய்க்கிழமை) மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31 ஆம... மேலும் பார்க்க

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. மாணவர் தற்கொலை! ஓராண்டில் 3-வது சம்பவம்!

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. பயிலும் மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.நொய்டாவைச் சேர்ந்த அங்கித் யாதவ்(வயது 24) என்ற இளைஞர் கான்பூர் ஐஐடியில் வேதியியல் துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி... மேலும் பார்க்க

தில்லி தோல்விக்குப் பிறகு... கேஜரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் சந்திக்கவுள்ளார். இதற்காக பஞ்சாபில் இருந்து தில்லிக்கு அவர் புறப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் நோயல் பாரோட்டை நேரில் சந்தித்தார். இதில், செய்யறிவு, புதிய கண்டுபிடிப்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச மேம்பாடுகள் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை! கட்டணம் ரூ.35,000

மகா கும்பமேளாவில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் இருந்து இருந்து திரிவேணி சங்கமத்தின் பின்புறத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்... மேலும் பார்க்க