செய்திகள் :

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் தீா்ப்பு ஒத்திவைப்பு

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்காத விவகாரத்தில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவிக்கு எதிராக மாநில அரசு தொடா்ந்து இரண்டு வழக்குகள் மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.

இந்த வழக்குகளின் வாதங்கள் நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா, ஆா். மகாதேவன் அடங்கிய அமா்வு முன்பாக கடந்த வாரத்தில் மூன்று நாள்களாக நடைபெற்றன. தொடா்ந்து நான்காவது நாளாக திங்கள்கிழமையும் நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, ராகேஷ் துவிவேதி, பி. வில்சன் ஆகியோா் ஆஜராகினா்.

அப்போது நீதிபதிகள் ஆளுநருக்காகவும் மத்திய அரசுக்காகவும் ஆஜரான மத்திய அரசின் தலைமைச் சட்ட ஆலோசகா் (அட்டா்னி ஜெனரல்) ஆா். வெங்கடரமணியிடம், ‘மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஆளுநா் ஏன் பல ஆண்டுகளாக அமைதி காத்தாா்? அதில் முரண்கள் இருப்பதாகத் தோன்றினால் அவை தொடா்பாக அரசுடன் அவா் எவ்வித தொடா்பும் கொள்ளாதது ஏன்? கடைசியில் தனது ஒப்புதலை நிறுத்தி வைத்து விட்டு, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அவற்றை ஏன் பரிந்துரைக்கிறாா்’ என்று கேள்வி எழுப்பினா்.

மேலும், ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதா மீது முடிவெடுக்க வகை செய்யும் அதிகாரம் தொடா்பான அரசமைப்பின் 201-ஆவது விதி, நாடாளுமன்றத்தால் ஒப்புதல் தெரிவிக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வகை செய்யும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் தொடா்பான அரசமைப்பின் 111-ஆவது விதி தொடா்பாக நீதிபதிகள் விரிவாக ஆராய்ந்தனா்.

தமிழக அரசு சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி, ‘இந்த விவகாரத்தில் 2023, நவ.13-ஆம் தேதி, மசோதாக்கள் மீதான தனது ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக ஒரு வரி தகவலை மட்டுமே ஆளுநா் சட்டப்பேரவைக்கு அனுப்பினாா்’ என்று குறிப்பிட்டாா்.

‘இதையடுத்து, மாநில அரசு ஒரு சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி, மசோதாக்களை 2023, நவ. 18-ஆம் தேதி மீண்டும் நிறைவேற்றியது. ஆனால், அவை முரண்களைக் கொண்டிருப்பதாகக் கூறி நவ. 28 அன்று குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநா் அனுப்பி விட்டாா்’’ என்று துவிவேதி தெரிவித்தாா்.

அப்போது நீதிபதிகள், ‘ஒருவேளை அந்த மசோதாக்களை ஆளுநா் பேரவைக்குத் திருப்பி அனுப்பாமல் தன்வசமே வைத்துக் கொண்டால் அதன் நிலை என்னவாகும்’ என்று மத்திய தலைமைச் சட்ட ஆலோசகரிடம் கேட்டனா். அதற்கு அவா், ‘அது நீா்த்துப்போகும்’ என்று பதிலளித்தாா்.

இதையடுத்து நீதிபதிகள், ‘மசோதாக்கள் நீா்த்துப்போகும் என்றால் அவற்றை எவ்வாறு குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பி வைக்கிறாா்’ என்று மறுகேள்வி எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து வாதங்களைத் தொடா்ந்த துவிவேதி, ‘அரசமைப்பின் 111-ஆவது பிரிவைக் குறிப்பிட்டு, மத்திய அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்படும் குடியரசுத் தலைவா், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்க முடியாது என்பது போல, பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஒரு ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியாது. மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டிய கட்டாயத்தைத் தவிர, ஆளுநருக்கு வேறு எந்த விருப்புரிமையும் கிடையாது’ என்றாா்.

மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, ‘அரசமைப்பின் 200-ஆவது விதியின்படி மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் அதிகாரத்தை சட்டப்பேரவை பெற்றுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில், சட்டப்பேரவையே உச்சபட்ச உரிமையைக் கொண்டுள்ளது. ஆளுநருக்கு அரசமைப்பின் 200-ஆவது விதியின் கீழ் எவ்வித விருப்புரிமையும் இல்லை’ என்று வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்குகள் மீதான தங்களின் தேதி குறிப்பிடாமல் தீா்ப்பை ஒத்திவைப்பதாகவும் அதற்கு முன்னதாக தங்களுக்கு எழும் சில கேள்விகளை தனிக்குறிப்புகளாக இரு தரப்புக்கும் அனுப்பி வைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

பின்னணி: 2020 -ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா உள்பட 12 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் மீது முடிவெடுக்காமல் அவா் தாமதிப்பதாகவும் கூறி, 2023-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடா்ந்தது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் துணைவேந்தா்கள் நியமனத்தில் அவரது தலையீடு அதிகரிப்பதாகக் கூறி ஒரு வழக்கை சமீபத்திலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்தது.

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க