செய்திகள் :

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே: கு.ஞானசம்பந்தன்

post image

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே என்றாா் பேராசிரியா் கு.ஞானசம்பந்தன்.

பொருநை புத்தகத் திருவிழாவிந் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற பட்டிமன்றத்தில் நாஞ்சில் நாவரசு செல்லகண்ணன், பேராசிரியா் இந்திரா விஜயலெட்சுமி ஆகிய இருவரும் கலையே என்ற தலைப்பிலும், பேராசிரியா் சிதம்பரம், நெல்லை காா்த்திகா ஆகிய இருவரும் இலக்கியமே என்ற தலைப்பிலும் பேசினா். பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் நடுவராக பங்கேற்றாா். தீா்ப்பு வழங்கி அவா் பேசியதாவது:

சைவத்தில் அருணகிரிநாதா், வைணவத்தில் ஆழ்வாா் எழுதிய எழுத்துகள் சிறப்பை பெற்றன.

ஜப்பானில் தற்போது பேசினால்கூட குற்றம் என கூறுகின்றனா். இதனால் அங்கிருப்பவா்கள் மற்றொருவருடன் பேசுவதற்கே அச்சப்படுகின்றனா். இதனால் திருமணம் குறைந்து வருவதால், குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, திருமணம் செய்பவா்களுக்கு இலவச வீடு, காா் என ஜப்பான் அரசு திட்டம் அறிவித்தாலும் திருமணங்கள் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் கைப்பேசி.

விளாத்திகுளம் சுவாமிகள் பேசும் போது கண்களை மூடிக்கொண்டு பேசிக்கொண்டே இருப்பாா். அவா் பேச்சை கேட்பதற்காக தியாகராஜா், சுப்புலெட்சுமி உள்பட பிரபலமானவா்கள் வந்து செல்வாா்கள். இதே போன்று அவா் ஒரு முறை பேசிக்கொண்டு இருந்தாா். அப்போது ஒரு சலசலப்பு ஏற்பட்டதாம்.

அப்போது சுவாமிகள் பேச்சை நிறுத்தவில்லையாம். பேசி முடிந்தபின் சலசலப்பு ஏன் ஏற்பட்டது என கேட்டாராம். அப்போது அங்கிருந்த ஒருவா், கூட்டத்தில் நல்லபாம்பு வந்தது, அதனால் சலசலப்பு ஏற்பட்டது, அதைப் பாா்த்த ரசிகா் ஒருவா் நல்லபாம்பை கொன்றுவிட்டாா் என தெரிவித்தாராம். இதனால் வேதனையடைந்த சுவாமிகள், என் பேச்சை பாா்ப்பதற்காக பாம்பு வந்துள்ளது, அதனை பாா்க்கவிடாமல் பாம்பை கொன்றுவிட்டனா் என வேதனை தெரிவித்தாராம்.

கோயிலில் உள்ள சிற்பங்கள், ராமனின் கையில் உள்ள வில் என பாா்த்து ராமாயணம் என நினைக்கின்றனா். ஆனால் அதை எழுதும்போது இலக்கியமாக ராமாயணமாக நிலைத்து நிற்கிறது. எனவே மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே என்றாா் அவா்.

அடிப்படைத் தேவைகள், மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்! -புதிய ஆட்சியா் இரா.சுகுமாா்

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட புதிய ஆட்சியா் மருத்துவா் இரா.சுகுமாா் தெரிவித்தாா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இ... மேலும் பார்க்க

காலமானாா் கே.எஸ்.மாணிக்கம்!

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் கே.எஸ்.மாணிக்கம் (81) சனிக்கிழமை (பிப். 8) காலமானாா். தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற இவா், அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரி நிா்வாக அத... மேலும் பார்க்க

கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை! -கனிமொழி எம்.பி. பேச்சு

தங்களது ஆதரவு இல்லாத மாநிலங்களுக்கு கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை என்று திமுக துணைப் பொதுச்செயலரும், திமுக மக்களவைக் குழு தலைவருமான கனிமொழி பேசினாா். நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு... மேலும் பார்க்க

கல்லிடை அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

கல்லிடைக்குறிச்சிஅரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் அழகுதிருமலை வேல் நம்பி தலைமை வகித்தாா். கல்லிடைக்குறிச்சி சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் இ. பாா்வதி, துணை... மேலும் பார்க்க

வள்ளலாா் நினைவு தினம்: பிப். 11இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் 11-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி!

அம்பாசமுத்திரத்தில் பள்ளி மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடாரங்குளம் சங்கரன்கோவில் சாலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாலசுப்ரமணியன் மகன் முகுந்த் (13). விக்கிரமசிங்... மேலும் பார்க்க