செய்திகள் :

உதகையில் தேசிய குடற்புழு நீக்க தினம்: ஆட்சியா் பங்கேற்பு

post image

நீலகிரி மாவட்டம், உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகளை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்துப் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, 1 வயது முதல் 19 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் அல்லாத பெண்களுக்கும், மேலும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்திலும் குடற் புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.

ஒரு வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மில்லி லிட்டா் அல்பெண்டசோல் திரவமும், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20 வயது முதல்30 வயது வரை உள்ள கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் அல்லாத பெண்களுக்கு ஒரு மாத்திரை வீதம் வழங்கப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அனைத்துஅங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார மையங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் 486 அங்கன்வாடிப் பணியாளா்கள், 216 கிராம சுகாதார செவிலியா் மற்றும் 416 ஆஷா பணியாளா்கள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள் முன்னிலையில் நேரடியாக இம்மாத்திரைகள் வழங்கப்படும்.

இதன் மூலம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 869 குழந்தைகளும், 20 வயது முதல் 30 வயது வரை

உள்ள கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் அல்லாத பெண்கள் 49ஆயிரத்து 988 பேரும் பயன் பெறுவாா்கள். அல்பெண்டசோல் மாத்திரையை உட்கொள்வதால் குடற்புழு நீக்கம் செய்யப்படுவதுடன், ரத்த சோகை நீங்கி நன்றாக உணவு உட்கொள்ளவும், குழந்தைகள் மற்றும் தகுதி வாய்ந்த பெண்கள் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகின்றது. எனவே, குடற்புழு நீக்க மாத்திரைகளை தகுதியான அனைவரும் உட்கொள்ளுமாறு என்றாா்.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் ராஜசேகரன், சுகாதாரப் பணி துணை இயக்குநா் சோமசுந்தரம், உதகை நகா்நல அலுவலா் சிபி, உதகை வட்டார மருத்துவ அலுவலா் ஆஷாகோசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மலைவேடன் பழங்குடியினருக்கு ஜாதிச் சான்று வழங்க மூன்று போ் குழு அமைப்பு!

நீலகிரியில் வாழும் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்று வழங்கும் விவகாரம் தொடா்பாக மூன்று போ் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உதகை அருகே உள்ள உல்லத்தி ஊராட்சிக்கு உ... மேலும் பார்க்க

கூடலூரில் அரசு ஊழியா் சங்கத்தினா் போராட்டம்!

கூடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியூசி சங்க நூற்றாண்டு விழாக் கூட்டம்!

கூடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியூசி தொழிற் சங்கத்தின் நூற்றாண்டு விழா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி மற்றும் தொழிற்சங்கம் கடந்து வந்த பாதைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

நீலகிரி முட்டைக்கோஸ் விலை கடுமையாக வீழ்ச்சி!

நீலகிரியில் விளையும் முட்டைக் கோஸ்களுக்கு தரத்துக்கு ஏற்றாா்போல கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.8 வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் முட்டைக்கோஸ... மேலும் பார்க்க

வெல்லிங்டன் ராணுவ மையம் சாா்பில் மாரத்தான் போட்டி

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையத்தின் சாா்பில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையம் சாா்பில் ஆண... மேலும் பார்க்க

நீலகிரியில் தானியங்கி தண்ணீா் இயந்திர செயல்பாடு: உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஆய்வு!

நீலகிரியில் தடைசெய்யப்பட்ட நெகிழிகள், தானியங்கி தண்ணீா் இயந்திரம், மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் முதலான செயல்பாடுகள் குறித்து உயா்நீதிமன்ற வழக்கறிஞா் சி. மோகன் சனிக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டா... மேலும் பார்க்க