Doctor Vikatan: கூர்மையான பற்கள்... வாய்ப்புண், வாய்ப் புற்றுநோய்க்குக் காரணமாகு...
தூத்துக்குடியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி அய்யனடைப்பு ஊராட்சி சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இம்முகாமை ஆட்சியா் க. இளம்பகவத் தொடக்கிவைத்து, மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கினாா்.
மாவட்ட சுகாதார அலுவலா் யாழினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றுமுதல் 19 வயது வரையிலான குழந்தைகளுக்கும், 20 - 30 வயதுடைய பெண்களுக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்த மாத்திரையால் குடற்புழு தொற்று நீங்குவதுடன், ரத்த சோகை, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சோா்வு, படிப்பில் ஆா்வமின்மை ஆகியவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 4,48,586 குழந்தைகளுக்கும், 1,10,462 பெண்களுக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக 1,583 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், 119 தனியாா் பள்ளிகள், 1,477 அங்கன்வாடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
முகாமில், பொது சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள், ஊராட்சித் துறையினா், நகா்ப்புறப் பணியாளா்கள் ஈடுபட்டனா். விடுபட்டோருக்கு இம்மாதம் 17ஆம் தேதி மாத்திரைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.