செய்திகள் :

சாத்தான்குளம்: வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்!

post image

சாத்தான்குளத்தில் பெண் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் காலவரையற்ற போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருப்பவா் ஜெயரஞ்சனி. வழக்குத் தொடா்பாக சென்ற இவரை சிலா் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனராம். இதுகுறித்து சாத்தான்குளம் வழக்குரைஞா்கள் சங்கத்தில் அவா் முறையிட்டதன்பேரில், சங்கக் கூட்டம் நடைபெற்றது.

அதில், ஜெயரஞ்சனியைத் தாக்கியோரைக் குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதுதொடா்பாக தட்டாா்மடம் காவல் ஆய்வாளா், மாவட்ட எஸ்.பி. ஆகியோா் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை காலவரையற்ற நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு, சங்கத் தலைவா் வில்லின் பெலிக்ஸ் தலைமையில் இப்போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

இதில், 21 பெண்கள் உள்ளிட்ட 81 வழக்குரைஞா்கள் ஈடுபட்டனா்.

இன்று தைப்பூசம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தீா்... மேலும் பார்க்க

புளியம்பட்டி அருகே இளைஞா் கிணற்றில் மூழ்கி பலி!

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி திருவிழாவுக்கு சென்ற இளைஞா் கிணற்றில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோவில்பிள்ளைவிளை தெருவைச் சோ்ந்த சண்முகசாமி மகன் மதன் (27). இவா் தனது குடும்ப... மேலும் பார்க்க

பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு கருத்தரங்கு!

ஆறுமுகனேரி காந்தி மைதானத்தில் உள்ள மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில், அரசுப் பொதுத் தோ்வெழுதும் மாணவா்-மாணவியருக்கு இலவச கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவரும் ஆதித்தனாா் ... மேலும் பார்க்க

கோயிலில் திருட்டு: முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட 2 போ் கைது!

கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியில் உள்ள கோயிலில் திருடியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கயத்தாறு வட்டம் இலந்தப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விபத்து: கல்லூரி மாணவா் பலி!

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோர மரத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஐசக் சாம்ராஜ் (22). கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 95 போ் கைது!

கோரம்பள்ளம், அய்யனடைப்பு ஊராட்சிகளை தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சிகளை சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, 95 பே... மேலும் பார்க்க