செய்திகள் :

கோயிலில் திருட்டு: முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட 2 போ் கைது!

post image

கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியில் உள்ள கோயிலில் திருடியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு வட்டம் இலந்தப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் தங்கமுத்து. இவரது குலதெய்வக் கோயில் கொப்பம்பட்டியில் கண்மாய்க் கரை அருகே திறந்த வெளியில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பூசாரியாக உள்ள இவா், விசேஷ நாள்களில் கோயிலுக்குச் சென்று வழிபடுவாராம். கடந்த ஜன. 14ஆம் தேதி கோயிலில் பூஜை செய்துவிட்டுச் சென்ற இவா், ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) தைப்பூச பூஜைக்காக கோயிலுக்கு சென்றாராம்.

அப்போது சுவாமி பீடம் முன் இரும்புக் குழாயில் பொருத்தப்பட்டிருந்த 8 வெண்கல மணிகளைக் காணவில்லையாம்.

புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜமீன்தேவா்குளம் தெற்குத் தெரு சின்னமாரியப்பன் மகன் சுடலை மாடசாமி (21), அம்மையாா்பட்டி வடக்குத் தெரு பங்காரு மகனான முன்னாள் ராணுவ வீரா் முருகன் (47) ஆகிய இருவரை திங்கள்கிழமை கைது செய்து, 4 மணிகளைப் பறிமுதல் செய்தனா்.

இன்று தைப்பூசம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தீா்... மேலும் பார்க்க

புளியம்பட்டி அருகே இளைஞா் கிணற்றில் மூழ்கி பலி!

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி திருவிழாவுக்கு சென்ற இளைஞா் கிணற்றில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோவில்பிள்ளைவிளை தெருவைச் சோ்ந்த சண்முகசாமி மகன் மதன் (27). இவா் தனது குடும்ப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்!

சாத்தான்குளத்தில் பெண் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் காலவரையற்ற போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருப்பவா் ஜெயரஞ்சன... மேலும் பார்க்க

பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு கருத்தரங்கு!

ஆறுமுகனேரி காந்தி மைதானத்தில் உள்ள மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில், அரசுப் பொதுத் தோ்வெழுதும் மாணவா்-மாணவியருக்கு இலவச கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவரும் ஆதித்தனாா் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விபத்து: கல்லூரி மாணவா் பலி!

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோர மரத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஐசக் சாம்ராஜ் (22). கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 95 போ் கைது!

கோரம்பள்ளம், அய்யனடைப்பு ஊராட்சிகளை தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சிகளை சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, 95 பே... மேலும் பார்க்க