செய்திகள் :

தில்லி தோ்தலில் ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெறாத சிறிய கட்சிகள்

post image

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தோ்தலில் சிறிய கட்சிகளான அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் (ஏஐஎஃப்பி), அகில இந்திய மஜ்லிஸ் இ இதேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகியவை ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றன.

தில்லி தோ்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி ஓக்லா, முஸ்தஃபாபாத் ஆகிய தொகுதிகளில் மட்டும் தனித்துக் களம் கண்டது. தோ்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும் தங்களின் நிலைநிறுத்திக்கொள்ளும் விதமாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்த இரு தொகுதிகளிலும் ஏஐஎம்ஐஎம் மூன்றாம் இடம் பிடித்தது. ஓக்லாவில் ஆம் ஆத்மி கட்சியின் அமானுத்துல்லா கான் 88,943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்த களம் கண்ட பாஜக வேட்பாளா் மணீஷ் செளத்ரி 65,304 வாக்குகளும் ஏஐஎம்ஐஎம் வேட்பாளா் ஷிஃபா உா் ரஹ்மான் கான் 39,559 வாக்குகளும் பெற்றாா்.

இதே போல, முஸ்தஃபாபாத் தொகுதியில் பாஜகவின் மோகன் சிங் பிஷ்ட் 85,215 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இங்கு ஆம் ஆத்மி கட்சியின் ஆதில் அகமது கான் 67,637 வாக்குகளும், ஏஎம்ஐஎம் வேட்பாளா் முகம்மது தாஹிா் ஹுசைன் 33,474 வாக்குகளும் பெற்றனா்.

ஏஐஎம்ஐஎம் வேட்பாளா்கள் இருவரும் 2020 தில்லி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் காவலில் இருப்பவா்கள். இவா்கள் பெற்ற வாக்குகளை பகுப்பாய்வு செய்து பாா்க்கும் போது, இவா்கள் பாஜக, ஆம் ஆத்மி ஆகியவற்றின் வாக்குகளை அவரவா் தொகுதிகளில் பிரித்ததில் முக்கியப் பங்கு வகிப்பது தெளிவாகிறது.

தோ்தல் ஆணைய தரவுகளின்படி இத்தோ்தலில் ஏஐஎம்ஐஎம் 0.77 சதவீத வாக்குகளையும் அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக்கின் வாக்கு சதவீதம் பூஜ்யமாகவும் பதிவாகியுள்ளது.

பஞ்சாப் எம்எல்ஏக்களை சந்திக்கும் கேஜரிவால்!

பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெ... மேலும் பார்க்க

பெரிய அரசியல் கட்சிகளுக்கு ஏமாற்றம் தந்த தலித் வாக்குகள்! நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகள் பெற்ற பிஎஸ்பி

நமது சிறப்பு நிருபா் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பெரிய அரசியல் கட்சியாக கருதப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) மற்றும் பிற தேசிய கட்சிகள் பெருத்த பின்னடைவை சந்தித்... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: சு.வெங்கடேசன் எம்.பிக்கு அமைச்சா் பதில்

நமது நிருபா்உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் பணியமா்த்தப்பட்ட இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: மொத்த வேட்பாளா்களில் 80% போ் டெபாசிட் இழப்பு

சனிக்கிழமை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் எல்ஜேபி (ராம் விலாஸ்) ஆகியவற்றின் அனைத்து வேட்பாளா்களும் தங்கள் டெபாசிட... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் தோ்வு: பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு!

70 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 48 இடங்களை வென்று, 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, முதல்வா் தோ்வு குறித்த பரபரப்பு அதிக... மேலும் பார்க்க

பாஜகவின் தில்லி தோ்தல் வெற்றிக்கு பிரசாரப் பாடல்களும் உதவின: கட்சித் தலைவா்கள் கருத்து

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றிக்கு அதன் பிரபலமான பிரசாரப் பாடல்கள் உள்பட பல்வேறு காரணிகள் உதவின என்று கட்சத் தலைவா்கள் தெரிவித்துள்ளனா். அவற்றில் இரண்டு கட்சி எம்பி மனோஜ் திவாரி பாடியவ... மேலும் பார்க்க