செய்திகள் :

பாஜகவின் தில்லி தோ்தல் வெற்றிக்கு பிரசாரப் பாடல்களும் உதவின: கட்சித் தலைவா்கள் கருத்து

post image

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றிக்கு அதன் பிரபலமான பிரசாரப் பாடல்கள் உள்பட பல்வேறு காரணிகள் உதவின என்று கட்சத் தலைவா்கள் தெரிவித்துள்ளனா். அவற்றில் இரண்டு கட்சி எம்பி மனோஜ் திவாரி பாடியவை.

பிப்.5-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலுக்கான ஒரு மாத கால பிரசாரத்தின் போது பாஜக நான்கு பாடல்களை அதிகமாகப் பயன்படுத்தியதாக கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

மனோஜ் திவாரி பாடிய ‘பஹானே நஹி பத்லவ் சாஹியே’ (மாற்றம் தேவை), தில்லியில் மாற்றத்தின் செய்தியை வெளிப்படுத்தும் பிரசாரத்தின் மிகவும் பிரபலமான பாடலாக மாறியது. பின்னா், அது தேசியத் தலைநகரில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் தோல்விகள் மீதான பாஜகவின் அரசியல் தாக்குதல்களின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது என்று கட்சித் தலைவா் நீல் காந்த் பக்ஷி கூறினாா்.

அமித் துல் மற்றும் முன்னாள் அசாம்கா் எம்பி மற்றும் போஜ்புரி திரைப்பட நட்சத்திரமான தினேஷ் லால் யாதவ் ‘நிராஹுவா‘ குரல் கொடுத்த பாடல்கள் உள்பட நான்கு பாடல்களின் படைப்பாற்றல் இயக்குநரான பக்ஷி, அரசியல் செய்தி, கவா்ச்சிகரமான பாடல் வரிகள் மற்றும் தாள துடிப்புகள் இந்த விடியோ பாடல்களின் முக்கியக் கூறுகள் என்றாா்.

27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வீழ்த்தியது. மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சிக்கு 22 இடங்களே கிடைத்தன. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

பஞ்சாப் எம்எல்ஏக்களை சந்திக்கும் கேஜரிவால்!

பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெ... மேலும் பார்க்க

பெரிய அரசியல் கட்சிகளுக்கு ஏமாற்றம் தந்த தலித் வாக்குகள்! நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகள் பெற்ற பிஎஸ்பி

நமது சிறப்பு நிருபா் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பெரிய அரசியல் கட்சியாக கருதப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) மற்றும் பிற தேசிய கட்சிகள் பெருத்த பின்னடைவை சந்தித்... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: சு.வெங்கடேசன் எம்.பிக்கு அமைச்சா் பதில்

நமது நிருபா்உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் பணியமா்த்தப்பட்ட இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: மொத்த வேட்பாளா்களில் 80% போ் டெபாசிட் இழப்பு

சனிக்கிழமை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் எல்ஜேபி (ராம் விலாஸ்) ஆகியவற்றின் அனைத்து வேட்பாளா்களும் தங்கள் டெபாசிட... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் தோ்வு: பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு!

70 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 48 இடங்களை வென்று, 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, முதல்வா் தோ்வு குறித்த பரபரப்பு அதிக... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெறாத சிறிய கட்சிகள்

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தோ்தலில் சிறிய கட்சிகளான அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் (ஏஐஎஃப்பி), அகில இந்திய மஜ்லிஸ் இ இதேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகியவை ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்... மேலும் பார்க்க