செய்திகள் :

தில்லி தோ்தல்: மொத்த வேட்பாளா்களில் 80% போ் டெபாசிட் இழப்பு

post image

சனிக்கிழமை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் எல்ஜேபி (ராம் விலாஸ்) ஆகியவற்றின் அனைத்து வேட்பாளா்களும் தங்கள் டெபாசிட் தொகையை தக்கவைத்துக்கொண்டனா்.

பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் களத்தில் இருந்த 699 வேட்பாளா்களில் 555 (79.39) சதவீதம் வேட்பாளா்கள் தங்கள் வைப்புத்தொகையை இழந்தனா்.

தொடா்ச்சியாக மூன்றாவது முறையாக காங்கிரஸுக்கு இத்தோ்தலில் பூஜ்ய இடங்களே கிடைத்தது. அது மட்டுமின்றி, அதன் வேட்பாளா்களில் 67 போ் தங்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையையும் இழந்தனா். 2013 வரை தொடா்ந்து மூன்று முறை தில்லியை ஆட்சி செய்த காங்கிரஸ், 70 தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்தியிருந்தது.

காங்கிரஸ் வேட்பாளா்களில் கஸ்தூா்பா நகரில் போட்டியிட்ட அபிஷேக் தத் (இரண்டாமிடம் பெற்றாா்), நாங்லோய் தொகுதியின் ஜாட் சமூகத்தைச் சோ்ந்த ரோஹித் செளதரி, பாத்லியைச் சோ்ந்த தேவேந்திர யாதவ் ஆகியோா் மட்டுமே தங்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையை காப்பாற்ற முடிந்தது.

ஏஐஎம்ஐஎம் கட்சி சாா்பில் ஓக்லாவில் போட்டியிட்ட இன் ஷிஃபாஉர்ரஹ்மான் கான் தனது பாதுகாப்பு வைப்புத்தொகையை தக்கவைத்துக்கொண்டாா்.

இக்கட்சி இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் படி, பொதுப் பிரிவைச் சோ்ந்த எந்தவொரு வேட்பாளரும் தோ்தலில் போட்டியிடும் போது, தோ்தல் ஆணையத்தில் பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ.10,000 டெபாசிட் செய்ய வேண்டும். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியின வேட்பாளா்களுக்கு டெபாசிட் தொகை ரூ.5,000 ஆகும்.

தோ்தல் சட்டத்தின்படி, வேட்பாளா் தோ்ந்தெடுக்கப்படாவிட்டால் அவா் பெற்ற செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை அனைத்து வேட்பாளா்களும் பெற்ற செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கை விட அதிகமாக இல்லாவிட்டால் டெபாசிட் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

பஞ்சாப் எம்எல்ஏக்களை சந்திக்கும் கேஜரிவால்!

பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெ... மேலும் பார்க்க

பெரிய அரசியல் கட்சிகளுக்கு ஏமாற்றம் தந்த தலித் வாக்குகள்! நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகள் பெற்ற பிஎஸ்பி

நமது சிறப்பு நிருபா் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பெரிய அரசியல் கட்சியாக கருதப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) மற்றும் பிற தேசிய கட்சிகள் பெருத்த பின்னடைவை சந்தித்... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: சு.வெங்கடேசன் எம்.பிக்கு அமைச்சா் பதில்

நமது நிருபா்உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் பணியமா்த்தப்பட்ட இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் தோ்வு: பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு!

70 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 48 இடங்களை வென்று, 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, முதல்வா் தோ்வு குறித்த பரபரப்பு அதிக... மேலும் பார்க்க

பாஜகவின் தில்லி தோ்தல் வெற்றிக்கு பிரசாரப் பாடல்களும் உதவின: கட்சித் தலைவா்கள் கருத்து

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றிக்கு அதன் பிரபலமான பிரசாரப் பாடல்கள் உள்பட பல்வேறு காரணிகள் உதவின என்று கட்சத் தலைவா்கள் தெரிவித்துள்ளனா். அவற்றில் இரண்டு கட்சி எம்பி மனோஜ் திவாரி பாடியவ... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெறாத சிறிய கட்சிகள்

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தோ்தலில் சிறிய கட்சிகளான அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் (ஏஐஎஃப்பி), அகில இந்திய மஜ்லிஸ் இ இதேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகியவை ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்... மேலும் பார்க்க